விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

Nov 09, 2024,01:26 PM IST

விழுப்புரம்: விஜய்க்கு ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். அப்படி என்றால் விசிக என்ன இன்ஆர்கானிக் மாசா. நாங்கள் காசு பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


எப்போதும் தேர்தல் வந்தால் தான் அரசியல் களம் சூடுபிடிக்கும், ஆனால், தற்போது தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நடத்திய மாநாட்டில் இருந்து அரசியல் களம் ப[டு சூடாக காணப்படுகிறது. மாநாடு முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை விஜய் பேசிய கருத்து குறித்த விவாதம் முடிந்தபாடில்லை. தொடர்ந்து பல்வேறு கட்சியினர்களும் விஜய் பேசியது குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 




இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன்  பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:


விஜய்க்கு கூடியது ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். அப்படி என்றால் விசிக என்ன இன்ஆர்கானிக் மாசா. நாங்கள் காசு பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர். திருமாவளவன் தலைமையில் ஆட்சி, கூட்டணி என்று யாராவது பேசினார்களா.இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இது தான் இந்த சமூகம். விசிகாவிற்கு ஆசை காட்டினால் வெளியில் வந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். திருமாவளவன் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பது காலம் சொல்லும்.


அதை புரிந்து கொள்ளவே உங்களுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் வந்தாலும், புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு போட்டியாளர்களாக இருக்க முடியாது. எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. இந்த களத்தில் யாரும் நம்முடைய போட்டிக்கு வர முடியாது. இந்த இயக்கத்தை நம்மால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். எனவே நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் முன் கவனமாக இருக்க வேண்டும்.


விஜயகாந்த் வந்த போது கூறினார்கள் விசிக காணாமல் போய்விடும் என்று. இன்று விஜய் வந்தவுடன் பயங்கரமான ஹைப் கொடுக்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சியும் திரும்பத் திரும்ப போட்டு காட்டுகின்றனர். ஆனால், நமக்கு அப்படி செய்யவில்லை. நான் சினிமா நட்சத்திரம் கூட இல்லை. எப்படி இவ்வளவு லட்சம் பேரை இழுத்தார்கள் என்று விவாதித்தார்களா?. 7:00 மணிக்கு மேல் கூட்டம் தாங்காது என்று ஏளனமாக பேசினார்கள். ஆனால், விடுதலை சிறுத்தைகள் அப்படி இல்லை என்று இப்போது தெரிந்திருக்கும் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்