ஒரே பானையில்.. 2 தொகுதிகளை லட்டு போல அள்ளிப் போட்டு.. ஜம்மென்று வென்ற விடுதலைச் சிறுத்தைகள்!

Jun 05, 2024,12:54 PM IST

சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து  இந்த முறையும் தமிழ்நாட்டில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர்.


லோக்சபா தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில்

திமுக தலைமையில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ்  9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.




வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி கிடைத்தது. 


கடந்த 2019 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது கட்சியின் ரவிக்குமார்  உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இந்த  முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக, பானை சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தது. இதற்காக சட்ட ரீதியாகவும் போராடியது. இருப்பினும் சுயேச்சை சின்ன வரிசையில், திருமாவளவனுக்கும், ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


சிதம்பரம் தனி தொகுதியில் வீசிக தலைவர் திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்பி ஆகின்றனர்.


இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் அவர்களும் மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா அமைப்பும் இந்தியா கூட்டணியிலான காங்கிரஸ் அமைப்பில் கை கோர்க்க வேண்டும். நவீன் பட்நாயக் அவர்களும் இந்த அணியுடன் இணைய வேண்டும். அப்போதுதான் இந்த 10 ஆண்டு காலமாக இருந்த ஆட்சியை மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக தூக்கி எறிய முடியும். அவருடைய அரசியலுக்கு சமாதி கட்ட முடியும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்