சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்த முறையும் தமிழ்நாட்டில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில்
திமுக தலைமையில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி கிடைத்தது.
கடந்த 2019 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது கட்சியின் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக, பானை சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தது. இதற்காக சட்ட ரீதியாகவும் போராடியது. இருப்பினும் சுயேச்சை சின்ன வரிசையில், திருமாவளவனுக்கும், ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம் தனி தொகுதியில் வீசிக தலைவர் திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்பி ஆகின்றனர்.
இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் அவர்களும் மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா அமைப்பும் இந்தியா கூட்டணியிலான காங்கிரஸ் அமைப்பில் கை கோர்க்க வேண்டும். நவீன் பட்நாயக் அவர்களும் இந்த அணியுடன் இணைய வேண்டும். அப்போதுதான் இந்த 10 ஆண்டு காலமாக இருந்த ஆட்சியை மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக தூக்கி எறிய முடியும். அவருடைய அரசியலுக்கு சமாதி கட்ட முடியும் என கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}