மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வருவது குறைந்திருப்பதால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு தென் மாவட்டங்களில் இருந்தும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இங்கு சில்லறை வியாபாரிகள் பெருமளவில் வந்து மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில்தான் வெப்பநிலை அதிகபட்சமாக 105 டிகிரி வரை சுட்டெரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது காய்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்து இருக்கிறது.
புரட்டாசி மாதம் எதிரொலி:
இது மட்டுமல்லாமல் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சைவம் மட்டுமே உண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரை பகுதிகளில் வசித்து வரும் சௌராஷ்டிரா சமூக மக்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வேண்டி அன்னதானமும் வழங்கி வருவர். இதனால் இந்த நாட்களில் பெரும்பாலும் சைவ உணவுகளையே உண்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது காய்கறிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறியின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூபாய் 350 லிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூபாய் 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கேரட்டின் விலை 50 லிருந்து 70 ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40லிருந்து 60 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள், எந்தக் காயை வாங்கி எப்படி சமைப்பது என்று கவலை அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Deepa Ravi Poem: பரந்து விரிந்த வானம்.. வியந்து தான் போகிறேன்!
சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
{{comments.comment}}