சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்து வந்தது. இதனால் வீடுகளில் தினசரி உபயோகிக்கும் காய்களின் விலை கணிசமாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரம் ஆக காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. ஏனெனில் தினசரி கோயம்பேடு சந்தையில் 700 லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும்.
கடந்த ஒரு வாரமாக 300 லாரிகளில்தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகளில் காய்கறி விலை அதிகமாக விற்கப்பட்டு வந்தது. இதனால் தினசரி அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் 500க்கும் அதிகமான லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூபாய் 120 இருந்த அவரக்காய் மற்றும் பீன்ஸ் விலை இன்று ஒரு கிலோ 90 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் , முள்ளங்கி, சௌசௌ, முட்டைக்கோஸ், போன்றவை கிலோ 50க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகிறது. விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}