சென்னை கோயம்பேட்டில்.. காய்கறி விலை ஜிலு ஜிலு குறைவு.. மக்கள் கல கல மகிழ்ச்சி..!

Jun 27, 2024,03:09 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


கடந்த ஒரு மாத காலமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்து வந்தது. இதனால் வீடுகளில் தினசரி உபயோகிக்கும் காய்களின் விலை கணிசமாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரம் ஆக காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. ஏனெனில் தினசரி கோயம்பேடு சந்தையில் 700 லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும். 




கடந்த ஒரு வாரமாக 300 லாரிகளில்தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகளில் காய்கறி விலை அதிகமாக விற்கப்பட்டு வந்தது. இதனால் தினசரி அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகம் செலவழிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் 500க்கும் அதிகமான லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.


கடந்த வாரம் கிலோ ரூபாய் 120  இருந்த அவரக்காய்  மற்றும் பீன்ஸ் விலை இன்று ஒரு கிலோ 90 ரூபாயாக குறைந்துள்ளது.  அதேபோல் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் , முள்ளங்கி, சௌசௌ, முட்டைக்கோஸ், போன்றவை கிலோ 50க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகிறது. விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்