சென்னை: அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலக் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
நாகை மாவட்டத்தில் 125 ஜே.சி.பி. இயந்திரங்கள், 75 மோட்டார் பொருத்திய படகுகள் உள்பட அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.கனமழையின் போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும். மழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க நடவடிக்கை அவசியம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}