முன்னாள் நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாதம் சிறை

Aug 12, 2023,09:46 AM IST
சென்னை : பல ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னாள் நடிகை ஜெயபிரதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்து பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 70, 80 களில் ஏறக்குறைய இந்திய சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஜெயபிரதா, பிறகு அரசியலிலும் நுழைந்து கலக்கினார்.



இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது தொழில் பங்குதாரர்களான ராம்குமார் மற்றம் ராஜா பாபு ஆகியோருடன் இணைந்து சென்னையில் தியேட்டர்  ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் தியேட்டர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தியேட்டரை மூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்கள், தங்களின் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈஎஸ்ஐ பணத்தை திருப்பி தரவில்லை என ஜெய பிரதா மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் ஜெய பிரதா, ராம்குமார் மற்றும் ராஜா பாபு மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜெய பிரதா மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் பதறிப் போன ஜெய பிரதா, தியேட்டர் பணியாளர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஈஎஸ்ஐ பாக்கி பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் படி ஜெய பிரதா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை கோர்ட், ஜெய பிரதாவிற்கு விதித்த 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதத்தை உறுதி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்