முன்னாள் நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாதம் சிறை

Aug 12, 2023,09:46 AM IST
சென்னை : பல ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னாள் நடிகை ஜெயபிரதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்து பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 70, 80 களில் ஏறக்குறைய இந்திய சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஜெயபிரதா, பிறகு அரசியலிலும் நுழைந்து கலக்கினார்.



இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது தொழில் பங்குதாரர்களான ராம்குமார் மற்றம் ராஜா பாபு ஆகியோருடன் இணைந்து சென்னையில் தியேட்டர்  ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் தியேட்டர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தியேட்டரை மூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்கள், தங்களின் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈஎஸ்ஐ பணத்தை திருப்பி தரவில்லை என ஜெய பிரதா மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் ஜெய பிரதா, ராம்குமார் மற்றும் ராஜா பாபு மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜெய பிரதா மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் பதறிப் போன ஜெய பிரதா, தியேட்டர் பணியாளர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஈஎஸ்ஐ பாக்கி பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் படி ஜெய பிரதா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை கோர்ட், ஜெய பிரதாவிற்கு விதித்த 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதத்தை உறுதி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்