திருச்சூர்: பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார். ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு, தாலாட்டுதே வானம் உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைப் பாடிய வானம்பாடி தனது மூச்சுக் காற்றை நிறுத்தியுள்ளது ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பி. ஜெயச்சந்திரன் தென்னிந்தித் திரையுலகில் தனி முத்திரை பதித்த மிகப் பெரிய பாடகர். அவர் பாடிய அத்தனை மொழியிலும் அந்த மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாடிய சாதனைக்குரியவர், பெருமைக்குரியவர் பி.ஜெயச்சந்திரன்.
80 வயதான ஜெயச்சந்திரன் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உபாதைகளைச் சந்தித்து வந்தார். திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மாலை மரணமடைந்தார்.

மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். ஜி. தேவராஜன், எம்.எஸ். பாபுராஜ், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என அவர் பாடாத இசையமைப்பாளர்களே கிடையாது. அத்தனை பேரின் இசையிலும் பாடிய பெருமைக்குரியவர்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருது, கேரளா மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் உள்பட ஏராளமான விருதுகள் அவரது பாடல் திறமையை அலங்கரித்துள்ளன. 2 முறை தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்ற பெருமைக்கும் உரியவர் ஜெயச்சந்திரன்.
1944ம் ஆண்டு கொச்சியில் பிறந்தவரான பி.ஜெயச்சந்திரன் கொச்சி ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்கள்
1973ம் ஆண்டு முதல் முறையாக தமிழில்பாடத் தொடங்கினார் ஜெயச்சந்திரன். அவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவரது இசையில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். பொன்னென்ன பூவென்ன கண்ணே, வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ என்று அந்தப் பாடல்களின் வரிசை மிக நீண்டது.
அதேபோல இசைஞானி இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் ஏராளம். மாஞ்சோலைக் கிளிதானோ, தாலாட்டுதே வானம், ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன், காளிதாசன் கண்ணதாசன், பூவிலே மேடை நான் போடவா, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொன்றிலும் அசத்தியிருப்பார் ஜெயச்சந்திரன்.
தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, வித்யாசாகர் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை பாடிய பெருமைக்குரியவர் ஜெயச்சந்திரன். இவரது தமிழ் உச்சரிப்பு அப்படி இருக்கும். தமிழை அட்சர சுத்தமாக உச்சரித்துப் பாடிய மலையாளத்து வானம்பாடி இன்று தனது இசை மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}