டெல்லி: நாடுகள் மீது படையெடுத்த மன்னர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்த நாட்டின் கலாச்சாரம், மொழியை அழித்தனர். மிகக் குரூரமாக நடந்து கொண்டனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழி. எனவே நமது கலாச்சாரம், மொழியை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகளை ஆக்கிரமித்த மன்னர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் மிகவும் கொடூரமாக இருந்தனர். மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் அழித்தனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழியாகும். எனவேதான் அவர்கள் அதைச் செய்தனர். இந்தியாவுக்குள் பல நூறாண்டுகளுக்கு முன்பு ஊடுறுவியவர்கள் இதைத்தான் செய்தனர். நமது வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டமைத்தனர்.

காட்டுமிராண்டித்தனம் கட்டறுத்து விடப்பட்டது. மிகவும் மோசமாக தங்களது ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர். ஒரு நாடானது அதன் கலாச்சார வளம், கலாச்சார நியமங்கள், மொழிச் செழுமையால்தான் அடையாளம் காணப்படுகிறது. அதை அழிப்பதே அந்த நாட்டை எளிதாக வெல்ல முடியும். இதைத்தான் அந்தக் காலத்தில் செய்தனர்.
எனவே நமது கலாச்சாரத்தையும், மொழியையும் அரசியல் சாசனத்தை நிறுவிய நமது மூதாதையர்கள் காட்டிய வழியில் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் ஜெகதீப் தங்கர்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}