டெல்லி: நாடுகள் மீது படையெடுத்த மன்னர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்த நாட்டின் கலாச்சாரம், மொழியை அழித்தனர். மிகக் குரூரமாக நடந்து கொண்டனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழி. எனவே நமது கலாச்சாரம், மொழியை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகளை ஆக்கிரமித்த மன்னர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் மிகவும் கொடூரமாக இருந்தனர். மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் அழித்தனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழியாகும். எனவேதான் அவர்கள் அதைச் செய்தனர். இந்தியாவுக்குள் பல நூறாண்டுகளுக்கு முன்பு ஊடுறுவியவர்கள் இதைத்தான் செய்தனர். நமது வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டமைத்தனர்.

காட்டுமிராண்டித்தனம் கட்டறுத்து விடப்பட்டது. மிகவும் மோசமாக தங்களது ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர். ஒரு நாடானது அதன் கலாச்சார வளம், கலாச்சார நியமங்கள், மொழிச் செழுமையால்தான் அடையாளம் காணப்படுகிறது. அதை அழிப்பதே அந்த நாட்டை எளிதாக வெல்ல முடியும். இதைத்தான் அந்தக் காலத்தில் செய்தனர்.
எனவே நமது கலாச்சாரத்தையும், மொழியையும் அரசியல் சாசனத்தை நிறுவிய நமது மூதாதையர்கள் காட்டிய வழியில் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் ஜெகதீப் தங்கர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}