டெல்லி: நாடுகள் மீது படையெடுத்த மன்னர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்த நாட்டின் கலாச்சாரம், மொழியை அழித்தனர். மிகக் குரூரமாக நடந்து கொண்டனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழி. எனவே நமது கலாச்சாரம், மொழியை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகளை ஆக்கிரமித்த மன்னர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் மிகவும் கொடூரமாக இருந்தனர். மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் அழித்தனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழியாகும். எனவேதான் அவர்கள் அதைச் செய்தனர். இந்தியாவுக்குள் பல நூறாண்டுகளுக்கு முன்பு ஊடுறுவியவர்கள் இதைத்தான் செய்தனர். நமது வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டமைத்தனர்.
காட்டுமிராண்டித்தனம் கட்டறுத்து விடப்பட்டது. மிகவும் மோசமாக தங்களது ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர். ஒரு நாடானது அதன் கலாச்சார வளம், கலாச்சார நியமங்கள், மொழிச் செழுமையால்தான் அடையாளம் காணப்படுகிறது. அதை அழிப்பதே அந்த நாட்டை எளிதாக வெல்ல முடியும். இதைத்தான் அந்தக் காலத்தில் செய்தனர்.
எனவே நமது கலாச்சாரத்தையும், மொழியையும் அரசியல் சாசனத்தை நிறுவிய நமது மூதாதையர்கள் காட்டிய வழியில் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் ஜெகதீப் தங்கர்.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}