டெல்லி: நாடுகள் மீது படையெடுத்த மன்னர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்த நாட்டின் கலாச்சாரம், மொழியை அழித்தனர். மிகக் குரூரமாக நடந்து கொண்டனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழி. எனவே நமது கலாச்சாரம், மொழியை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகளை ஆக்கிரமித்த மன்னர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் மிகவும் கொடூரமாக இருந்தனர். மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் அழித்தனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழியாகும். எனவேதான் அவர்கள் அதைச் செய்தனர். இந்தியாவுக்குள் பல நூறாண்டுகளுக்கு முன்பு ஊடுறுவியவர்கள் இதைத்தான் செய்தனர். நமது வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டமைத்தனர்.

காட்டுமிராண்டித்தனம் கட்டறுத்து விடப்பட்டது. மிகவும் மோசமாக தங்களது ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர். ஒரு நாடானது அதன் கலாச்சார வளம், கலாச்சார நியமங்கள், மொழிச் செழுமையால்தான் அடையாளம் காணப்படுகிறது. அதை அழிப்பதே அந்த நாட்டை எளிதாக வெல்ல முடியும். இதைத்தான் அந்தக் காலத்தில் செய்தனர்.
எனவே நமது கலாச்சாரத்தையும், மொழியையும் அரசியல் சாசனத்தை நிறுவிய நமது மூதாதையர்கள் காட்டிய வழியில் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் ஜெகதீப் தங்கர்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}