சென்னை: கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாளை பேசவுள்ளார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் சந்திப்பைத் தொடங்கியுள்ளார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு இப்போது அனல் பறக்க பரபரப்பைக் கூட்டத் தொடங்கியுள்ளது. திருச்சி, அரியலூரில் கூட அவரது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாகப்பட்டனத்தில் அவர் அனல் கக்கப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பமான சம்பவங்களாக விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகள் அமைந்தது போல விஜய்யின் நாகைப் பேச்சும் அரசியல் களத்தில் அலைகளை உருவாக்கி விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் பேசப் போகும் பேச்சுக்களும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

குறிப்பாக நாளைய அவரது பிரச்சாரம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நாளைய நி்கழ்ச்சி நிரலில் கரூரும் இடம் பெற்றிருப்பதுதான். நாமக்கலில் நாளை முதலில் பேசவுள்ளார் விஜய். அடுத்து கரூரில் பேசப் போகிறார். இதில் கரூர் கூட்டத்துக்குப் பெரும் இழுபறிக்குப் பின்னரே அனுமதி கிடைத்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கரூரில் விஜய் என்ன பேசுவார் என்பது இப்போது பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளது. நிச்சயம் செந்தில் பாலாஜி குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சும், நாகை பேச்சு போல பரபரப்பைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையே, நாளை சனிக்கிழமை விஜய் கூட்டங்கள் நடைபெறவுள்ளதால், நாமக்கல், கரூரில் இப்போதே தவெக தொண்டர்கள் ஆர்வத்துடன் தயாராக ஆரம்பித்து விட்டனர். அதேபோல நேரலையில் அதைக் கண்டு களிக்க தமிழ்நாடு முழுவதும் இப்போதே ஆர்வமும் கிளர்ந்தெழ ஆரம்பித்து விட்டது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}