சென்னை: கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாளை பேசவுள்ளார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் சந்திப்பைத் தொடங்கியுள்ளார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு இப்போது அனல் பறக்க பரபரப்பைக் கூட்டத் தொடங்கியுள்ளது. திருச்சி, அரியலூரில் கூட அவரது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாகப்பட்டனத்தில் அவர் அனல் கக்கப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பமான சம்பவங்களாக விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகள் அமைந்தது போல விஜய்யின் நாகைப் பேச்சும் அரசியல் களத்தில் அலைகளை உருவாக்கி விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் பேசப் போகும் பேச்சுக்களும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

குறிப்பாக நாளைய அவரது பிரச்சாரம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நாளைய நி்கழ்ச்சி நிரலில் கரூரும் இடம் பெற்றிருப்பதுதான். நாமக்கலில் நாளை முதலில் பேசவுள்ளார் விஜய். அடுத்து கரூரில் பேசப் போகிறார். இதில் கரூர் கூட்டத்துக்குப் பெரும் இழுபறிக்குப் பின்னரே அனுமதி கிடைத்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கரூரில் விஜய் என்ன பேசுவார் என்பது இப்போது பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளது. நிச்சயம் செந்தில் பாலாஜி குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சும், நாகை பேச்சு போல பரபரப்பைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையே, நாளை சனிக்கிழமை விஜய் கூட்டங்கள் நடைபெறவுள்ளதால், நாமக்கல், கரூரில் இப்போதே தவெக தொண்டர்கள் ஆர்வத்துடன் தயாராக ஆரம்பித்து விட்டனர். அதேபோல நேரலையில் அதைக் கண்டு களிக்க தமிழ்நாடு முழுவதும் இப்போதே ஆர்வமும் கிளர்ந்தெழ ஆரம்பித்து விட்டது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}