சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் விஜய்க்கு விருப்பம் இல்லை. மேலும் தனது தலைமையில்தான் கூட்டணி என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். அவர் ஒரு மவுனப் புரட்சியை நோக்கி நடை போடுவதாக தெரிகிறது என்று இந்தியா டுடே அசோசியேட் எடிட்டர் பிரமோத் மாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் கணக்குகளைப் போடுவதில் மும்முரமாக உள்ளன. யாருடன் கூட்டணி சேருவது என்ற வேலைகளில் படு தீவிரமாக உள்ளன. சில கட்சிகள் பகிரங்கமாக கூட்டணி தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுகின்றன. பல கட்சிகள் இதை ரகசியமாக செய்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மிகவும் சைலன்ட்டாக தனது வேலைகளைச் செய்து வருகிறார். அவர் என்ன கணக்கில் உள்ளார் என்பதே தெளிவாகத் தெரியவில்லை. எதற்கும் அலட்டிக் கொள்வது போலவும் தெரியவில்லை. கூட்டணிகளைத் தேடி பல கட்சிகள் தாறுமாறாக ஓடிக் கொண்டுள்ள நிலையில் விஜய்யை நோக்கி யாரும் இதுவரை வந்தது போலத் தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து விஜய் கவலைப்படுவது போலவும் தெரியவில்லை.

இந்த நிலையில் இந்தியா டுடே இதழின் அசோசியேட் எடிட்டர் பிரமோத் மாதவ் ஒரு நிகழ்ச்சி அழைப்புக்காக விஜய்யை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் விஜய் மனம் விட்டு அரசியல் பேசியுள்ளார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக பிரமோத் மாதவ் கூறுகையில், விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அதில் விஜய் தெளிவாக இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை. தவெக தலைமையில்தான் கூட்டணி என்பதிலும் தெளிவாக இருக்கிறார். மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி தெளிவாக நடைபோட்டு வருகிறார்.

தன் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்தும் அவர் கவலைப்படவில்லை. குறிப்பாக திமுகவின் பேச்சுக்களால் அவர் தடுமாறவில்லை, அச்சமடையவும் இல்லை. அதைப் பொருட்படுத்தவும் இல்லை.
சுருங்கச் சொல்வதானால், தனது தலைமையில்தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர், அதிமுக பாஜகவுடன் கூட்டணி கிடையாது, திமுக அரசை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் இது மட்டுமே விஜய்யின் இலக்காக உள்ளது. அதில் அவர் உறுதியுடன் இருக்கிறார், தெளிவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
தவெகவின் மதுரை மாநில மாநாட்டில் தனது கட்சியின் பல்வேறு அதிரடி முடிவுகளையும் விஜய் வெளியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டணி குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை விஜய் வெளியிடலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}