சென்னை : விஜய் மக்கள் இயக்கம் இப்போதே கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஸ்டிரிக்ட்டான முறையில் ஒரு அரசியல் அமைப்பாக மலர்ந்து வருவதாக ரசிகர்கள் பெருமையுடன் சொல்லி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு விஜய் தயாராகி வருகிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக ஃபேஸ் ஸ்கேனிங் செய்வதற்கு சமீபத்தில் தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிற்கு சென்று வந்தார்.

மற்றொரு புறம் அரசியல் என்ட்ரிக்கும் விஜய் தயாராகி வருகிறார். இதற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்த், கட்சியின் ஒவ்வொரு குழு உறுப்பினர்களையும் அழைத்து பேசி வருகிறார். சமீபத்தில் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் மகளிர் குழு உறுப்பினர்களை அழைத்து புஸ்சி ஆனந்த் உரையாடினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், நான் விஜய்யின் அதிதீவிர ரசிகை என்று சொல்லி பேச துவங்கினார். அப்போது குறுக்கிட்ட புஸ்சி ஆனந்த், இனி மேல் நம்முடைய தலைவரை யாரும் பேரை சொல்லி குறிப்பிட வேண்டாம். இனி வரும் காலத்தில் அவரை தளபதி என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}