சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. கட்சி தொடங்கி ஓராண்டு முடிய உள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்களை நியமிக்காமல் இருந்தார் விஜய். சமீபத்தில் தான் 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடிக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். அது குறித்து கடந்த 24ம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர் முதல் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை அடக்கிய பட்டியலை விஜய் வெளியிட்டு உள்ளார். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் ஒரு நிர்வாகிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பூத்திற்கு 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு
NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்
தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு
Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்
{{comments.comment}}