சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. கட்சி தொடங்கி ஓராண்டு முடிய உள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்களை நியமிக்காமல் இருந்தார் விஜய். சமீபத்தில் தான் 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடிக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். அது குறித்து கடந்த 24ம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர் முதல் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை அடக்கிய பட்டியலை விஜய் வெளியிட்டு உள்ளார். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் ஒரு நிர்வாகிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பூத்திற்கு 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}