சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பெயரை விஜய் மாற்றி உச்சரித்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
என்ன நடந்தது? :
சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.எஸ். பாபு என்பவரை ஆதரித்து விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றிய விஜய், தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க முயன்றார். அப்போது, கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ். பாபுவின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக மாதவரம் தொகுதி வேட்பாளர் பிரபு என்பவரின் பெயரை உச்சரித்தார்.
தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு :
திடீரென தொகுதி வேட்பாளர் பெயர் மாறியதைக் கேட்ட அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு நிமிடம் சிறு குழப்பம் ஏற்பட்டது. உடனடியாகத் தனது தவறை உணர்ந்து கொண்ட விஜய், அதனைச் சரிசெய்து கொண்டு வி.எஸ். பாபுவுக்காகத் தொடர்ந்து வாக்கு சேகரித்தார். அரசியல் களத்திற்குப் புதியவரான விஜய், மிகக் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவதால், பணிச்சுமை மற்றும் களைப்பு காரணமாக இத்தகைய சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் :

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்தது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை தான் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்துள்ளார். இந்த சமயத்தில் இங்கு பிரச்சாரம் செய்த விஜய், விரைவில் விடைபெற போகும் திமுக அரசு என குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார்.
சமூக வலைதளங்களில் வைரல் :
இந்தத் தகவல் மற்றும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் வைரலாகத் தொடங்கின. ஒரு தரப்பினர் இது மனித இயல்புதான் என்று அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் இதனை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், விஜய்யின் வருகைக்காகக் கூடியிருந்த பெரும் கூட்டமும், மக்களின் வரவேற்பும் தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்...பிரச்சாரத்தில் சலசலப்பு
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!
நெகிழி இல்லா உலகத்தை படைப்போம்!
{{comments.comment}}