பக்ரீத் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்.. மாநாடு எப்போ தலைவா.. பதிலுக்கு கேட்ட ரசிகர்கள்!

Jun 17, 2024,05:59 PM IST

சென்னை: பக்ரீத் நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு எப்போது நடைபெறும் என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கேட்டு வருகின்றனர்.


உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்ட தூதர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில், அதிகாலையில் மசூதிகள், பொது மைதானங்களில் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகைகள் செய்தி இறைவனை வழிபாடு செய்வார்கள்.




தமிழகத்தில் பக்ரித் திருவிழாவை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில், தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது இணைய பக்கத்தில்,


அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


இதற்கிடையே, பதிலுக்கு மாநாடு எப்போது தலைவா என்று ரசிகர்கள் அவரது எக்ஸ் தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். வெறும் வாழ்த்து மட்டும் போதாது தலைவா.. சீக்கிரமே மாநாடு வைங்க என்றும் அவர்கள் அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்