Rest in Peace Captain: ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன்.. நல்லடக்கம் செய்யப்பட்டார் விஜயகாந்த்

Dec 29, 2023,07:40 PM IST

சென்னை:  மறைந்த தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சோபம் லட்சம் தொண்டர்கள் கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்த்துக்கு பிரியா விடை அளித்தனர். 


முன்னதாக இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் தீவுத்திடலிலிருந்து கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபடி வந்தனர்.  மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால் வாகனம் நகருவதில் மிக மித தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்ட 4.45 மணிக்கு மேல்தான் வாகனம் கோயம்பேடு அதிமுக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது.


உடல் வந்து சேர்ந்ததும் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் தொடங்கின. பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இறுதியாக சந்தனப்பேழை மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.




200 பேருக்கு மட்டுமே அனுமதி


மக்கள் அலைகடல் என திரண்டு வந்திருக்கும் காரணத்தினால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


நேர்மை, எளிமை, தைரியம், கடுமையான உழைப்பாளி என என்னற்ற பண்புகளை கொண்டிருந்த விஜயகாந்த் மறைந்து விட்டார்.  இதை இன்னும் கூட ரசிகர்களால் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்குள்ளும் ஊடுறுவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த். 


2006ல் தேமுதிகவை தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வந்தார் கேப்டன் விஜயகாந்த். தன்னை பார்க்க வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்கி மகிழ்ந்த கொடை வள்ளல். படப்பிடிப்பில் தனக்கு வழங்கப்படும் உயர் தர உணவுகள் அனைத்துமே கடைநிலை தொழிலாளிக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் கேப்டன். அதற்கு செலவாகும் கூடுதல் தொகையை தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் கூறுவாராம்.




சாதி மதம் பார்க்கமாட்டார் என்பதற்கு அவர் வீட்டு பூஜை அறையே உதாரணம். கேப்டன் விஜயகாந்த் விட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா, இயேசு-மாதா, திருப்பதி ஏழுமலையான், முருகர், விநாயகர் படங்கள் வைக்கப்பட்டிருக்கும். மனசு சரி இல்லை என்றால் கண்ணூர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்வது கேப்டன் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி பல வகையிலும் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த விஜயகாந்துக்கு தமிழ் கூறும் நல்லுலகம் பிரியா விடை கொடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்