சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2016ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் பெரும்பாலும் ஓய்வில்தான் இருந்து வருகிறார். கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் பிரபாகரன் ஆகியோர்தான் பார்த்துக் கொள்கின்றனர்.
வீட்டிலேயே ஓய்விலும், சிகிச்சையிலுமாக இருந்து வரும் விஜயகாந்த் அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அவர் அழைத்து வரப்பட்டிருப்பதாக கட்சித் தலைமையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க தொண்டர்கள் அலை மோதினர். விஜயகாந்த் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து தொண்டர்கள் பலர் அழுததையும் பார்க்க முடிந்தது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}