Vikravandi by election: ஒரு கை பார்ப்போம்.. வழக்கம் போல் தனித்துக் களம் குதிக்கும் நாம் தமிழர் கட்சி

Jun 11, 2024,06:11 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஆலோசனைக்குப் பின் விக்கிரவாண்டி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என நாம் தமிழர் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். இதன்  காரணமாக விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் உடனே அமலுக்கு வந்தது. இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜூன் 14ம் தேதி முதல் ஜூன் 21ம் தேதிக்குள் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனுக்கள்  ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், ஜூன் 26ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி நடைபெறும். வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, எட்டு சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை அள்ளி மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையம் அடைந்து சாதனை படைத்துள்ள, நாம்தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதியிலும் தனித்து போட்டியிட உள்ளதாக  அறிவித்துள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் இது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிகிறது. யார் வேட்பாளராக யார் களம் காண்பார் என்று தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அதிகரித்து வரும் வாக்குகள்




நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மு களஞ்சியம் 8352 வாக்குகள் பெற்றார். விழுப்புரம் தொகுதியில் ஒட்டுமொத்தமாக இக்கட்சிக்கு 57,242 வாக்குகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டியில் விசிக, பாமக, அதிமுக ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்திருந்தது.


கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா அஸ்மி 8216 வாக்குகள் பெற்றிருந்தார்.  அப்போது நாம் தமிழர் க ட்சிக்கு 3வது இடம் கிடைத்திருந்தது. அமமுகவுக்கு 4வது இடமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் மெல்ல மெல்ல கூடிக் கொண்டே வருவதும் கவனிக்கத்தக்கது.


கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளை நாம் தமிழர் கட்சி இங்கு பெற்றால் அது முக்கியத்துவம் பெறும் என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்