ரிடையர் ஆன பிறகு பாருங்க.. கிரிக்கெட் பக்கமே வர மாட்டேன்.. இப்படி சொல்லிட்டாரே விராட் கோலி!

May 16, 2024,05:38 PM IST

பெங்களூரு: கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்ற பின் என்னை யாராலும் பார்க்க முடியாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.


நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர் விராட் கோலி. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்தலாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றவர் விராட் கோலி. இவருக்கு தற்போது  35 வயது ஆகின்றது. இதனால் அவ்வப்போது அவரது ஓய்வு குறித்த பேச்சு பேசப்பட்டு வருகிறது. மேலும், டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி 20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற கருத்து் உள்ளது.




இந்நிலையில், அவரே தனது ஓய்வு குறித்து பேசி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கின்றேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை.


ஒவ்வொரு நாளும் கடந்த கால கிரிக்கெட் குறித்து சிந்திக்கவும் விரும்பவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின் நாட்களில் வருத்தம் அடையக் கூடாது. ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால்,கிரிக்கெட் களம் விட்டு வெளியேறினால், யாரும் என்னை பார்க்கவே முடியாது. அதனால் களத்தில் இருக்கும் வரை 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்