ரிடையர் ஆன பிறகு பாருங்க.. கிரிக்கெட் பக்கமே வர மாட்டேன்.. இப்படி சொல்லிட்டாரே விராட் கோலி!

May 16, 2024,05:38 PM IST

பெங்களூரு: கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்ற பின் என்னை யாராலும் பார்க்க முடியாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.


நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர் விராட் கோலி. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்தலாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றவர் விராட் கோலி. இவருக்கு தற்போது  35 வயது ஆகின்றது. இதனால் அவ்வப்போது அவரது ஓய்வு குறித்த பேச்சு பேசப்பட்டு வருகிறது. மேலும், டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி 20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற கருத்து் உள்ளது.




இந்நிலையில், அவரே தனது ஓய்வு குறித்து பேசி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கின்றேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை.


ஒவ்வொரு நாளும் கடந்த கால கிரிக்கெட் குறித்து சிந்திக்கவும் விரும்பவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின் நாட்களில் வருத்தம் அடையக் கூடாது. ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால்,கிரிக்கெட் களம் விட்டு வெளியேறினால், யாரும் என்னை பார்க்கவே முடியாது. அதனால் களத்தில் இருக்கும் வரை 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்