சென்னை : மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் இறப்பிற்கு பிறகு பலரும் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு பெண்ணின் பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
சாமானிய மக்களின் மனதில் எந்த அளவுக்கு ஆழமாக வாழ்ந்து வருகிறார் விஜயகாந்த் என்பதற்கு இது ஒரு துளி உதாரணம்.
நடிகராக இருந்து, அரசியல் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் தமிழக அரசியலிலும் முக்கிய இடம் பிடித்த விஜயகாந்த், தனது 71வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமா பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபலங்கள் பலர் விஜயகாந்த் உடனான தங்களின் வாழ்க்கை அனுபவங்களை போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் உடன் பழகிய சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவரை பற்றிய நினைவுகளை வேதனையுடன் பகிர்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பலரும் விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சோஷியல் மீடியாக்களில் காவலர் ஒருவர் விஜயகாந்த்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல் விஜயகாந்த் முதன் முதலில் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து ஜெயமணி ஜெயா என்கிற பெண் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
தனது பதிவில் அந்த பெண், "எங்க ஊர் விருத்தாசலத்தில் தான் முதன் முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போ கம்ப்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ மிடில் கிளாஸ் பெண்களுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு... இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டன் ஆக அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் எம்எல்ஏ வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு. தங்கமான மனுஷன்" என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த்தால் ஏற்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிளாசில் சேர்ந்து படித்து பெற்ற சான்றிதழின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அந்த பெண், விஜயகாந்த் எளிய மனிதர்களுடனும் எவ்வளவு அன்பாக சாதாரணமாக பழகக் கூடியவர் என்பதையும், பலருக்கும் எட்டா கனியாக இருந்த விஷயங்களைக் கூடிய சாத்தியப்பட வைத்த தலைவர் என்பதையும் எடுத்துக்காட்டி உள்ளது.
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}