- பா. பானுமதி
விஷால் சிறு பிள்ளையாக இருக்கும்போது இரவு நேரங்களில் தூங்கவே மாட்டான். தூக்கம் வராமல் என்னையும் தூங்க விட மாட்டான்.
சில நேரங்களில் அழுகையான அழுகை எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருப்பான்.
வெளியே கூட்டிக் கொண்டு செல்ல சொல்வான். நடு இரவில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் அவனை பல வகைகளில் சமாதானப்படுத்துவேன்.
சில நேரம் ரொம்ப அழுதால் பூஜை அறைக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லுவேன்.
ஒருநாள் இரவு நான் மழையில் நனைந்து விட்டதால் எனக்கு இரவு முழுவதும் மூச்சிரைத்தது. தூங்க முடியவில்லை. நான் எழுந்து அமர்ந்து கொண்டிருந்தேன். கண்ணில் லேசாக கண்ணீர் வந்து கொண்டே இருந்தது
தூங்கிக் கொண்டிருந்த விஷால் எழுந்து விட்டான். என்னை பார்த்ததும் என்னருகில் வந்து என் கண்களை துடைத்து விட்டான். என்னை படுக்கச் சொல்ல என்னால் படுக்க முடியவில்லை.

உடனே வேகமாக பூஜை அறைக்குச் சென்று அங்கு நின்று அவன் நாராயண காயத்ரி சொல்லிவிட்டு திருநீரைக் கொண்டு வந்து என் நெற்றி நிறைய பூசி விட்டான். என் கைகளில் நெஞ்சில் எல்லாம் திருநீறு பூசி விட்டு சுக்லாம் பரதம் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.
அதை கண்டதும் ஆனந்தத்தில் எனக்கு மூச்சு விடுதலும் சீராகிவிட்டது. ஆனந்த கண்ணீரில் அப்படியே தூங்கி விட்டேன்.
திருநீருக்கு மகிமை இருக்கிறது
விஷால் விளையாட்டு தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடி.. கருணைக்கிழங்கு மசியல்!
திருநீற்றின் மகிமை .. விஷால் விளையாட்டுக்கள் (18)
சீனாவிலிருந்து திரும்பிய கையோடு.. ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்த.. டிரம்ப் திட்டம்?
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.. அதிலும் அமாவாசையன்று குளிப்பது மிக சிறப்பு!
ஐபிஎல் 2026: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாபத் தோல்வி.. அடுத்து என்ன?
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது
{{comments.comment}}