- பா. பானுமதி
விஷால் சிறு பிள்ளையாக இருக்கும்போது இரவு நேரங்களில் தூங்கவே மாட்டான். தூக்கம் வராமல் என்னையும் தூங்க விட மாட்டான்.
சில நேரங்களில் அழுகையான அழுகை எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருப்பான்.
வெளியே கூட்டிக் கொண்டு செல்ல சொல்வான். நடு இரவில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் அவனை பல வகைகளில் சமாதானப்படுத்துவேன்.
சில நேரம் ரொம்ப அழுதால் பூஜை அறைக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லுவேன்.
ஒருநாள் இரவு நான் மழையில் நனைந்து விட்டதால் எனக்கு இரவு முழுவதும் மூச்சிரைத்தது. தூங்க முடியவில்லை. நான் எழுந்து அமர்ந்து கொண்டிருந்தேன். கண்ணில் லேசாக கண்ணீர் வந்து கொண்டே இருந்தது
தூங்கிக் கொண்டிருந்த விஷால் எழுந்து விட்டான். என்னை பார்த்ததும் என்னருகில் வந்து என் கண்களை துடைத்து விட்டான். என்னை படுக்கச் சொல்ல என்னால் படுக்க முடியவில்லை.

உடனே வேகமாக பூஜை அறைக்குச் சென்று அங்கு நின்று அவன் நாராயண காயத்ரி சொல்லிவிட்டு திருநீரைக் கொண்டு வந்து என் நெற்றி நிறைய பூசி விட்டான். என் கைகளில் நெஞ்சில் எல்லாம் திருநீறு பூசி விட்டு சுக்லாம் பரதம் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.
அதை கண்டதும் ஆனந்தத்தில் எனக்கு மூச்சு விடுதலும் சீராகிவிட்டது. ஆனந்த கண்ணீரில் அப்படியே தூங்கி விட்டேன்.
திருநீருக்கு மகிமை இருக்கிறது
விஷால் விளையாட்டு தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}