சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நடிகர் விஷால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது. விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.

வாழும் போது பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயர் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார். நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}