சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நடிகர் விஷால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது. விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
வாழும் போது பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயர் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார். நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}