சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நடிகர் விஷால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது. விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
வாழும் போது பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயர் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார். நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}