சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நடிகர் விஷால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது. விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.

வாழும் போது பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயர் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார். நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}