VJ சித்ராவின் தந்தையின் அதிர்ச்சி முடிவு.. மகளின் துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கினார்!

Dec 31, 2024,08:42 PM IST

சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை தனது மகளின் நினைவுகளை மறக்க முடியாமல் அவரது துப்பட்டாவிலேயே தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.


சின்னத்திரையில் தொகுப்பாளினியாக, நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. சின்னத்திரை சித்ரா, விஜே சித்ரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தபோது மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றார். பட்டி தொட்டியெங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது.




இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஹேம்நாத் என்பவரை மணந்து கொண்டார் சித்ரா. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் சித்ரா. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். 


4 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். அதில், சித்ராவின் கணவர்தான் அவரது மரணத்திற்குக் காரண் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ரேவதி. இந்த தீர்ப்பு வந்தது முதலே சித்ராவின் தந்தை காமராஜ் (64 வயது) மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.  டிசம்பர் 9ம் தேதிதான் சித்ராவின் நினைவு நாளாகும். அன்றும் பெரும் சோகத்துடன் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் மகள் சித்ராவின் துப்பட்டாவை எடுத்து தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார் காமராஜ்.


சித்ராவின் நினைவால் அவரது தந்தை எடுத்த இந்த முடிவு அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையம், அக்கம் பக்கத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலை உணர்வு ஏற்பட்டால் உடனடியாக உரிய மன நல ஆலோசனை பெறத் தயங்காதீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு காண முயலுங்கள். அப்படி முடியாவிட்டால் உரிய கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுங்கள். தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக கீழ்க்கண்ட உதவி எண்களை அழைத்து உரிய ஆலோசனைகளைப் பெறுங்கள்.


Tamil Nadu State health department's suicide helpline: 104

Sneha Suicide Prevention Centre - 044-24640050



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

சட்டவிரோதமாக அமெரிக்காவில்.. குடியேறியுள்ள இந்தியர்களை.. திரும்பப் பெற தயார்.. பிரதமர் மோடி உறுதி

news

தவெக தலைவர் விஜய்க்கு.. ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

news

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி.. பிப்ரவரி 20ல் முழக்கப் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!

news

சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்

news

மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!

news

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு

news

இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்