அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

Jan 19, 2026,05:35 PM IST
சென்னை: தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் தலைமை மாற்றங்களுக்கு மத்தியில், கட்சியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருந்து வருகிறார். "அதிமுகவை ஒருங்கிணைப்பேன்" என்று அவர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது அதற்கான களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில், கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.





இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய முடிவாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூர் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பொதுக்கூட்டம் சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. 
இந்த பொதுக்கூட்டம் வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான தனது திட்டங்கள் குறித்தும் சசிகலா முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவின் இந்த அதிரடி நகர்வு, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதற்கிடையில் ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ., கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டிலும் சசிகலா கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது சசிகலாவும் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.,க்கு இதுவரை அந்த பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வழங்கப்படவில்லை என அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனால் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக.,வில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்