சென்னை: வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், திராவிட ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இந்த குழந்தைகளின் சிரிப்புதான், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற மரியாதை. இதன்மூலம், மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறேன்!
திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம், ஆனால் அதற்காக பாடுபடுவது எளிதானது அல்ல, சாமானிய மக்களின் எழுச்சி தான் திராவிட இயக்கம். மக்களின் குரலாக திமுக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் என்றால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பதவி மோகத்தில் இருந்தோம் என சிலர் நினைக்கின்றனர். எங்கள் அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இங்கு இடமில்லை. இந்த உழைப்பை தான் பெரியார், அண்ணா, கலைஞர் கற்றுத்தந்தனர்.

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கு. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவற்காக கிடைத்த வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும்.
கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் 3 ஆண்டு தந்தோம். குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோமே, இதெல்லாம் வாக்கு அரசியலுக்காகவா? 6,288 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கபோகிறோம். இது என்ன வாக்கு அரசியலுக்காக செய்வதா? இன்மேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை கவனித்துக்கொள்ள அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
{{comments.comment}}