வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Sep 15, 2025,05:47 PM IST

சென்னை: வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், திராவிட ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இந்த குழந்தைகளின் சிரிப்புதான், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற மரியாதை. இதன்மூலம், மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறேன்!


திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம், ஆனால் அதற்காக பாடுபடுவது எளிதானது அல்ல, சாமானிய மக்களின் எழுச்சி தான் திராவிட இயக்கம். மக்களின் குரலாக திமுக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் என்றால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பதவி மோகத்தில் இருந்தோம் என சிலர் நினைக்கின்றனர். எங்கள் அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இங்கு இடமில்லை. இந்த உழைப்பை தான் பெரியார், அண்ணா, கலைஞர் கற்றுத்தந்தனர்.




வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கு. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவற்காக கிடைத்த வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும். 


கொரோனாவால் பெற்றோர் இருவரையும்  இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் 3 ஆண்டு தந்தோம். குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோமே, இதெல்லாம் வாக்கு அரசியலுக்காகவா? 6,288 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கபோகிறோம். இது என்ன வாக்கு அரசியலுக்காக செய்வதா? இன்மேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை கவனித்துக்கொள்ள அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நினைவு ஒரு இனிமை!

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்