சேலம்: மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 90,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனை அடுத்து திறந்த விடப்படும் நீரின் அளவும் அதிகரித்து மேட்டூர் அணைக்கு நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
பின்னர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவு அப்படியே 16 மதகு கண் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறுகளில் அதிக நீர் வரத்து உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 90,000 கன அடி ஆக குறைந்தது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர், அப்படியே திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாகவே உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சி ஆக உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}