சென்னை: தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் நீர் இருப்பு கடந்த 10 நாட்களில் 14 சதவீதம் அதிகரித்து, 72.85 சதவீதமாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 90 அணைகளின் நீர் இருப்பு 73.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்து அணைகள் பல நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதுவரை 1,810 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்களில் தொடர் மழை பெய்வதால் அவை வேகமாக நிரம்பி வருகின்றன.

90 அணைகளின் நீர் இருப்பு:
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என மொத்தம் 90 அணைகள் உள்ளன . இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடி ஆகும். இதை டிஎம்சி கணக்கில் சொன்னால், 224.297 டிம்சி ஆகும். இவற்றில் 1,65,260 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 10 நாட்களில் 90 அணைகளின் நீர் இருப்பு 72.85 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது நீர் இருப்பு 73.68 சதவீதம் உயர்ந்து உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.42 அடி (505 மில்லியன் கன அடி)
செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 17.07அடி (2420 மில்லியன் கன அடி)
சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 1.19 அடி (84 மில்லியன் கன அடி)
செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 15.51(1626 மில்லியன் கன அடி)
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 30.54 அடி ( 310 மில்லியன் கன அடி)
வீராணம்:
மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 13.90 அடி ( 1051மில்லியன் கன அடி)
மேட்டூர் அணை நீர் மட்டம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,917 கனடியில் இருந்து 11,526 கனடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று குறைந்து 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு 107.24 அடியாக உள்ளது. அதாவது 74.543 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் மூலமாக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}