வயநாடு: கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு கண்காணித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு நபர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர். அதேபோல் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரியும் களம் காண்கின்றனர். அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருவதால் பிரச்சார பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முக்கிய மூன்று கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 14,71,732 வேட்பாளர்கள் உள்ளனர்.
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
பிரியங்கா காந்தி, கல்பட்டா நகரத்தில் உள்ள ஜென் ஜோசப் பள்ளி வாக்குச்சாவடியில் திடீரென என்ட்ரி கொடுத்து பார்வையிட்டார். ஏராளமான மக்கள் பிரியங்கா காந்தியை உற்சாகமுடன் வரவேற்றனர். நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இத்தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}