விறுவிறு வயநாடு வாக்குப்பதிவு.. மக்கள் ஆர்வம்.. வாக்குச் சாவடிகளில் பிரியங்கா காந்தி ஆய்வு!

Nov 13, 2024,11:41 AM IST

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு கண்காணித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு  பெரும்பான்மை வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு நபர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 


காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர். அதேபோல் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரியும் களம் காண்கின்றனர்.  அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருவதால் பிரச்சார பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முக்கிய மூன்று  கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 14,71,732 வேட்பாளர்கள் உள்ளனர்.





வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


பிரியங்கா காந்தி, கல்பட்டா நகரத்தில் உள்ள ஜென் ஜோசப்  பள்ளி வாக்குச்சாவடியில் திடீரென என்ட்ரி கொடுத்து  பார்வையிட்டார். ஏராளமான மக்கள் பிரியங்கா காந்தியை உற்சாகமுடன் வரவேற்றனர். நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இத்தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்