வயநாட்டில் மீண்டும் கனமழை.. ராணுவம் அமைத்த பாலம் சேதம்.. தரைப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது!

Aug 14, 2024,03:53 PM IST

திருவனந்தபுரம்: வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.  ஏற்கனவே மீட்பு பணிகளுக்காக போடப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதேபோல ராணுவம் அமைத்த இரும்புப் பாலமும் சேதமடைந்துள்ளது.


வயநாட்டில் கடந்த ஜூலை மாத 29ம் தேதி  நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. இந்த 3 கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420யை கடந்துள்ளது.  273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவு பலரது வாழ்க்கையினையும் கேள்விக்குறியாக்கி சென்றுள்ளது.




இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கையின் கோர பசிக்கு பலரும்  இரையாகியுள்ளனர்.  இந்நிலையில், இன்னும் இயற்கையின் கோரப்பசி தீரவில்லை போலும். ஏற்கனவே வந்த நிலச்சரிவில் இருந்து பலரும் மீளாத நிலையில், தற்பொழுது கேரளாவில் வயநாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கனமழை நேற்றில் இருந்து பெய்து வருகிறது. 


இதனால் தற்போது மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.  அந்த பகுதி முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏற்கனவே அடித்து செல்லப்பட்ட பாலம், தற்காலிகமாக அமைக்கப்பட்டு மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல ராணுவம் அமைத்த  பெய்லி  தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தால் சேதமடைந்து விட்டது. அந்த பாலத்தை சரி செய்யும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்