திருவனந்தபுரம்: வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே மீட்பு பணிகளுக்காக போடப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதேபோல ராணுவம் அமைத்த இரும்புப் பாலமும் சேதமடைந்துள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூலை மாத 29ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. இந்த 3 கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420யை கடந்துள்ளது. 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவு பலரது வாழ்க்கையினையும் கேள்விக்குறியாக்கி சென்றுள்ளது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கையின் கோர பசிக்கு பலரும் இரையாகியுள்ளனர். இந்நிலையில், இன்னும் இயற்கையின் கோரப்பசி தீரவில்லை போலும். ஏற்கனவே வந்த நிலச்சரிவில் இருந்து பலரும் மீளாத நிலையில், தற்பொழுது கேரளாவில் வயநாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கனமழை நேற்றில் இருந்து பெய்து வருகிறது.
இதனால் தற்போது மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏற்கனவே அடித்து செல்லப்பட்ட பாலம், தற்காலிகமாக அமைக்கப்பட்டு மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல ராணுவம் அமைத்த பெய்லி தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தால் சேதமடைந்து விட்டது. அந்த பாலத்தை சரி செய்யும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
{{comments.comment}}