சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில் நாட்களாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் இது வரைக்கு 107 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. 150க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் சேதம் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கேரள தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், உள்ளூர் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். தி கோட் பட சூட்டிங்கிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் கேரளா சென்றிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் நெடுநேரம் காத்திருந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் கேரள நிலச்சரிவு விஜய்யையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கேரளத்தின் வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும்" , பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}