Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

Nov 23, 2024,05:38 PM IST

சென்னை: நேரு - காந்தி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு எம்பி நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளார். இது நேரு காந்தி குடும்பத்தின் 4வது தலைமுறையிலிருந்து வரும் இன்னும் ஒரு எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அரசியல் குடும்பங்களில் முக்கியமானது ஜஹர்லால் நேரு - இந்திரா காந்தி குடும்பம். நாட்டின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி பின்னர் பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்துள்ளார்.  இதில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தீவிரவாதத்திற்குப் பலியானவர்கள்.  இப்படி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜவஹர்லால் நேரு குடும்பத்திலிருந்து இப்போது பிரியங்கா காந்தி புதிய எம்.பியாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார். இதன் மூலம் புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது.  நான்காவது தலைமுறையிலிருந்து 2வது எம்.பியாக நாடாளுமன்றம் செல்லவுள்ளார் பிரியங்கா காந்தி.



முதல் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு எம்.பியாக இருந்துள்ளார். 2வது தலைமுறையில் அவரது மகள் இந்திரா காந்தி எம்.பி. ஆனார். 3வது தலைமுறையில் ராஜீவ் காந்தியும், பிறகு அவரது மனைவி சோனியா காந்தியும், அதேபோல ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும் எம்.பியாக இருந்துள்ளனர். 4வது தலைமுறையில் எம்.பியாக ராகுல் காந்தியும், மேனகா காந்தி மகன் வருண் காந்தியும் எம்.பியாக இருந்துள்ளனர். இப்போது இந்த வரிசையில் 4வது தலைமுறையிலிருந்து புதிதாக பிரியங்கா காந்தி எம்.பியாகிறார்.

இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரானார். சோனியா காந்தி ராஜீவ் காந்தியின் மனைவி ஆவார். ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்  மனைவி சோனியா காந்தி இந்திய தேசிய காங்கிரஸில்  1998 ஆம் ஆண்டு முதல் 2017 வரை தலைவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தி 2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். அதே சமயத்தில் சகோதரி பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

தெற்கிலிருந்து 3வது எம்.பி



நேரு காந்தி குடும்பத்திலிருந்து தென் மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3வது நபர் பிரியங்கா காந்தி ஆவார். இதற்கு முன்பு அவரது தாயார் சோனியா காந்தி, கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி ஆகியிருந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி கேரளாவிலிருந்து எம்.பி. ஆனார். தற்போது இவர்களுடன் பிரியங்காவும் இணைந்துள்ளார்.

தற்போது லோக்சபாவில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக அதிரடி காட்டி வருகிறார். அவருடன் பிரியங்கா காந்தியும் இனி இணையவுள்ளதால் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இருவரும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்