சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் எனும் புதுவித காய்ச்சல் நோய் பரவி வருகிறது. தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்ட் நைல் எனும் க்யூலெக்ஸ் வகை கொசுக்களிடம் இருந்து பரவுகிறது. இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை.முதன் முதலில் இந்நோய் 1937ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயினால் 2022ம் ஆண்டு ஒருவர் உயிழந்த நிலையில், தற்போது கேரளாவில் இந்நோய் பரவி வருகிறது.
இக்காய்ச்சல் வந்தவர்களுக்கு நரம்பியல் நோய்கள் ஏற்படலாம் என்றும், நோய் தீவிரமடையும் வரை அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் கொசுக்கள் கடிப்பதனால் பரவுகிறதாம். இந்நோய் டெங்கு, சிக்கன் குனியாவை போன்று கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறதாம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும்.

ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை உடையது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதாக வருமாம். ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழக மக்கள் கவனமுடன் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், வெஸ்ட் நைல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். இது, கொசுகள் மூலம் பரவுவதால் பொதுமக்கள் வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், வெஸ்ட் நைல் நோய்க்கு தடுப்பூசி இல்லை. ஆனால் முன்கூட்டியே கண்டறிந்தால் பாதிப்பிலிருந்து மீளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என பொது சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}