சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிப் பேச்சு வார்த்தையில் சுமூகம் ஏற்பட்டடுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்று கூட்டணி உறுதியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமாக கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் அணி, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சரத்குமார் தனது கட்சியையே பாஜகவுடன் சேர்த்து விட்டார்.

அமமுக - ஓபிஎஸ்ஸுக்கு தலா 4?
இந்தக் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்துள்ளது. இதில் அமமுக விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் பாஜக ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரு கட்சிகளுடன் பாமக தனித்தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், பாமக உடன் அதிமுக இணையுமா.. பாமக உடன் பாஜக இணையுமா.. என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கூட்டணி குறித்த பாமக தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படாததால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் பாஜகவோடு பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். இந்த பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம், அமைச்சர் பதவி ஒதுக்க வேண்டும் என பாமக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாம்.
ஆனால், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகளும் ,ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தால், உடன்பாடு இன்று இறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}