உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பதற்கும் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது முக்கியம். காலையில் எழுந்தவுடன், சாப்பாட்டிற்கு முன்பு, நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது, தேவையற்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்க உதவும். சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். செரிமானம் மேம்படும். உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உடலில் போதுமான அளவு தண்ணீர் இருப்பது உடல் நலத்திற்கு மிகவும் அவசியம். இது ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்லவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. தண்ணீர் குடிக்கும் நேரம் உடல் எடை மற்றும் செரிமானத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். வயிறு நிறைந்த திருப்தி ஏற்படும். கொழுப்பை எரிக்கவும் இது உதவும். உடல்நிலை சரியில்லாத போது, சீக்கிரம் குணமடையவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடை குறையவும் தண்ணீர் உதவுகிறது. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஆரோக்கியமான உடலை பெறலாம். உடல் எடையை குறைக்க தண்ணீர் குடிக்கும் சரியான நேரத்தை தெரிந்து கொள்வோம்.

காலையில் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். இரவில் தூங்கி எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இரவில் தூங்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து இருக்கும். காலையில் தண்ணீர் குடிப்பதால், உடல் மீண்டும் நீர்ச்சத்துடன் புத்துணர்ச்சி பெறும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடலின் நச்சுக்களை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை தயார்படுத்தவும் உதவுகிறது. இதனால் கொழுப்பு எரிக்கப்பட்டு, செரிமானம் மேம்படும்.
சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் எடையை குறைக்க உதவும். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால், பசி குறையும். செரிமான நொதிகள் தூண்டப்படும். இதனால் உணவு எளிதில் செரிமானமாகும். இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். "சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன". இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவும்.
நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இது தேவையற்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்க உதவும். நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது. உதாரணமாக, காலை மற்றும் மதிய வேளைகளில் தண்ணீர் குடிக்கலாம். இது பசி எடுக்காமல் இருக்க உதவும். மேலும், உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் இது உதவும். தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. இது இரவில் உடலின் செல்களை சரிசெய்யவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவும். இதனால் நல்ல தூக்கம் வரும்.
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும். சில நேரங்களில் தாகத்திற்கும், பசிக்கும் வித்தியாசம் தெரியாமல் போகலாம். ஆனால், தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்கலாம். சாப்பிட்ட உடனே பசி எடுத்தால், தண்ணீர் குடித்துப் பாருங்கள். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், பசி எடுப்பது போல் தோன்றும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், பசி கட்டுப்படும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றலாம். தேவையற்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}