சென்னை: "குழந்தைகளை கொண்டாடுவோம்" என்பது சொல்லாகவே நிற்கிறது... இது வருத்தமும், வேதனையும் தருகிறது. ஏமாற்றத்தைக் கொடுக்கிறது என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை.
குழந்தைகள் தினத்தை நேற்று நாடு முழுக்கக் கொண்டாடினர். அதேசமயம் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கொண்டாட்டமும் இல்லையாம். மாணவர்களுக்கு இனிப்பு கூட வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்த ஆசிரியை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு நடவடிக்கையாக பள்ளியில் உறுதிமொழி ஏற்பு
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
புகை இல்லா பொங்கல் கொண்டாடும் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
பள்ளி தூய்மை உறுதிமொழி
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
மாணவர் மனநலம் பேணும் ஆலோசனை கூட்டம்
வானவில் மன்றம்
சிறார் மன்றம்
மகிழ்முற்றம்
சுற்றுச்சூழல் மன்றம்..
என பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு... மாணவர் மையமாக கொண்டு...
கல்வி வளர்ச்சி நாள்
அரசியல் தலைவர்கள் பிறந்த நாள்
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாள்
என பல்வேறு தினங்களில் மாணவர்களுக்கு பள்ளியில் இனிப்பு பொங்கல்...
மாணவர்களை வைத்து அனைத்து நாட்களையும் கொண்டாடும் சமூகத்திற்கு மாணவர்களை கொண்டாடும் குழந்தைகள் தின நாளில் பள்ளிகளில் இனிப்புகள் வழங்க வாய்ப்பு இல்லாமல் போனது ஏனோ??
குழந்தைகள் தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் மாணவர்களை மகிழ்விக்க "கலைநிகழ்ச்சிகள்" பள்ளியில் நடத்த உத்தரவு வழங்காதது ஏனோ?? அரசுப் பள்ளிகளில் இதை செய்யாமல் விட்டது ஏமாற்றம் தருகிறது.
நாள்தோறும் புத்தகப்பை சுமக்கும் மாணவர்களின் மகிழ்ச்சியை இந்த நாளில் கவனிக்காதது ஏனோ?? என்று அவர் வினவியுள்ளார். அதேசமயம், தனியார் பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கு நிச்சயம் அது உற்சாகமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}