Citizenship.. டிரம்ப் அதிரடியால்.. அமெரிக்காவில் வாழ் இந்தியர்களிடையே அதிகரிக்கும் சிசேரியன்கள்!

Jan 24, 2025,07:42 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதால், முன் கூட்டியே சிசேரியன்களைச் செய்ய இந்திய வம்சாவளியினரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமெரிக்காவில் இயற்கையான குடியுரிமை அல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்ததை ரத்து செய்து அறிவித்தார்.




புதிய அமெரிக்க குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படாது என்ற அறிவிப்பால், பிற நாட்டு வம்சாவளியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்காத நிலை ஏற்படும்.


இதனால் அமெரிக்காவில் வாழும் பலரும் முன்கூட்டியே பிரசவத்துக்கு முயல்கின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வாழும் அமெரிக்காவில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் சிசேரியன் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது 8 மாதத்திலேயே சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவிக்க இந்தியப் பெண்கள் அவசரம் காட்டுகின்றனராம். ஆனால், இப்படி முன்கூட்டியே சிசேரியன் செய்வதால் தாய்க்கும் குழந்தைக்கும் பல்வேறான பதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.


குறிப்பாக, சிசேரியன் மூலமாக முன் கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் பல சிக்கல்களும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் கூறியதை கேட்ட பின்னரும் கூட, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்காக, 8 மற்றும் 9வது மாதத்தில் கர்ப்பிணியாக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் பெற்றோர்கள் பலரும் சிசேரியன் செய்ய அவசரம் காட்டுகின்றனராம்.


இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், முன்கூட்டியே பிரசவத்திற்காக மருந்துகள் மூலம் வலி உண்டாக்கப்படுகிறது. ஒருவேளை செயற்கை வலி ஏற்படவில்லை என்றால், சிசேரியன் செய்யப்படுகிறது. இவ்வாறு சிசேரியன் செய்யப்படும் போது தாயின் வயிற்றில் பெரிய கீறல்கள் ஏற்படும். இந்த கீறல்களினால் அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்படுவதுடன், தாயின் எதிர்கால கர்ப்பங்களையும் இந்த சிசேரியன் சிக்கலாக்குகிறது.


குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தாயிடமிருந்து குழந்தையை வெளியே எடுப்பதால் குழந்தைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, பெருமூளை வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள், அத்துன் வளர்ச்சியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


டிரம்ப் இன்னும் என்னவெல்லாம் கூத்தை அரங்கேற்றப் போறாரோ!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்