மலாய்கா அரோராவின் தந்தை தற்கொலை செய்தது ஏன்.. கடைசியாக நடந்தது என்ன?.. புதுத் தகவல்!

Sep 12, 2024,02:13 PM IST

மும்பை : பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவின் தந்தை அனில் மேத்தா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கடைசியாக நடந்தது என்ன, அவர் என்ன பேசினார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


நடிகை மலாய்கா அரோராவின் தந்தை அனில் மேத்தா செப்டம்பர் 08ம் தேதி காலை மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள 6வது தளத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து மலாய்கா அரோரா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டிலும், இந்த இழப்பால் தங்களின் குடும்பமே கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 


மலாய்கா அரோராவின் தந்தை அனில், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய இரு மகள்களுக்கும் போன் செய்து பேசி உள்ளார். அப்போது தான் சோர்வாக இருப்பதாக கூறியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கடைசியாக என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணை தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது மலாய்காவின் தாய் ஜோய்சி கூறுகையில், அந்த சம்பவம் நடந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன். காலை 9 மணியளவில் வரவேற்பு அறையில் அவரது செருப்பும், அவரும் இருந்ததை பார்த்தேன். ஆனால் அதற்கு பிறகு நான் வேலையாக உள்ளே சென்றதால் அவர் பால்கனிக்கு சென்றதை நான் பார்க்கவில்லை.


சிறிது நேரத்தில் கீழே இருந்து செக்யூரிட்டி உதவி கேட்டு சத்தம் போட்டார். அவரது குரல் கேட்டதால், ஏதோ பிரச்சனை போல என்று தான் வெளியில் வந்து பார்த்தேன். அப்போது தான் இந்த விபரீதம் நடந்தது எனக்கு தெரிந்தது. அவர் பால்கனியில் இருந்து குதிப்பதற்கு முன்பாக, இரு மகள்களிடமும் போனில் பேசி உள்ளார். அப்போது, தான் சோர்வாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது மலாய்கா அரோரா புனேவில் இருந்துள்ளார். 




மும்பையின் தானே பகுதியில் பிறந்த மலாய்கா அரோராவின் தந்தை பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவர். இந்தியன் மெர்சன்ட் நேவியில் பணியாற்றியவர். அவரது தாய் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். மலாய்காவிற்கு 11 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மலாய்காவும், அவரது சகோதரியும், தாயுடன் சென்று விட்டனர். இருந்தாலும் அடிக்கடி தங்களின் தந்தையையும் அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.


மலாய்காவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிந்ததும் அவரது முன்னாள் கணவர் அர்பாஸ் கானும், முன்னாள் காதலர் என சொல்லப்பட்டு வந்த அர்ஜூன் கபூரும் அனில் மேத்தா தற்கொலை செய்து கொண்ட அப்பாட்மென்டிற்கு நேரில் சென்று மலாய்காவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்