முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

Jul 31, 2025,11:43 AM IST

முருகப்பெருமானின் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழனி தலம் உருவாவதற்குக் காரணமானதுமான ஒரு நிகழ்வு உண்டு. இதை ஞானப்பழம் கதை என்றும் அழைக்கலாம்.


அது என்ன ஞானப் பழம் கதை?


ஒருமுறை, நாரத முனிவர் கயிலாயம் வந்திருந்தார். அவர் கையிலே ஒரு ஞானப்பழம் வைத்திருந்தார். அந்தப் பழம், உண்ணுபவருக்கு சகல அறிவையும், ஞானத்தையும் தரக்கூடியது. நாரதர் அந்தப் பழத்தை சிவபெருமானிடம் சமர்ப்பித்தார்.


சிவபெருமான், அந்த ஞானப்பழத்தைத் தனது இரு புதல்வர்களான விநாயகருக்கும், முருகனுக்கும் கொடுக்க விரும்பினார். ஆனால், பழம் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அதனால், ஒரு போட்டி வைத்தார். "உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இந்தப் பழம் சொந்தம்" என்று அறிவித்தார்.




உடனே முருகன், தனது மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு, உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டார். மயில் வேகம் கொண்டது என்றாலும், உலகம் பெரியது அல்லவா? அதனால், முழு உலகையும் சுற்றி வர அவருக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.


விநாயகர் சற்று யோசித்தார். உலகம் என்பது அன்னை தந்தையே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்தார். அதனால், தனது பெற்றோர்களான சிவபெருமானையும், பார்வதி தேவியையும், "அம்மையும் அப்பனும்தான் உலகம்" என்று கூறி, அவர்களை மும்முறை சுற்றி வந்தார்.


விநாயகரின் இந்தச் செயலால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், ஞானப்பழத்தை விநாயகருக்கே அளித்தார்.


உலகைச் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த முருகன், விநாயகர் ஞானப்பழத்தைப் பெற்றதைக் கண்டு கோபம் கொண்டார். "பழத்தின் பொருட்டு உன்னைக் குழந்தையென்று பாராமல் போர் செய்தேன். இந்தப் பழம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே" என்று எண்ணி, சினம் கொண்டு, தனது ஆடையை நீக்கி, கையில் இருந்த வேலை எறிந்துவிட்டு, ஆண்டியாக தலையை மொட்டையிட்டு, கடுக்கன் அணிந்து, கோவணத்துடன், திருவாவினன்குடி (பழனி அடிவாரம்) வந்து அமர்ந்து விட்டார்.


"ஞானப்பழம் கிடைக்காததால் கோபத்துடன் அமர்ந்திருக்கும் என் குழந்தையை சமாதானப்படுத்த வேண்டுமே" என்று பார்வதி தேவி கயிலையிலிருந்து முருகன் அமர்ந்திருந்த தலத்திற்கு வந்தார். பலமுறை சமாதான வார்த்தையும் கூறியும் முருகன் மனம் இரங்கவில்லை. அப்போது, "இங்கிருந்து கிளம்பாமல் இங்கேயே அமர்ந்துவிட்டாயே. நீயே ஞானப்பழம்" என்று கூறினார் பார்வதி தேவியார்.. அவர் "பழம் நீ" என்று கூறியதால், அந்த இடம் பழனி என்று அழைக்கப்பட்டது.


இந்தக் கதை, பக்தி, ஞானம், பெற்றோர் மீதுள்ள அன்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பழனி முருகன் கோவில், தமிழகத்தின் முக்கியமான அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு முருகன், ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் துறவுக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்