- கா.சா.ஷர்மிளா
கஸஸ் அத்தியாயத்தில் மூஸா நபியின் தாயாரை பார்த்து: அச்சம் கொள்ளாதீர்! கவலை கொள்ளாதீர்! என்று அல்லாஹ் சொல்கிறான்.
மர்யம் அத்தியாயத்தில் மர்யம் அவர்களை பார்த்து: கவலைப்படாதீர் என அழைத்து சொன்னான்.
அஹ்ஜாப் அத்தியாயத்தில் நபியின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்

பல வசனங்கள் பெண்கள் கவலைப் பட கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன.
ஏனென்றால், பெண்களின் கவலை மிக ஆழமாக இருக்கும். கவலை பெண்களின் அழகைப் போக்கி விடும். கவலை பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.. கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை. கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது. கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.
கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.
வார்த்தையினால் உங்கள் தாயாரைக் காயப்படுத்தாதீர். உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர். உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர். உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள்.
எப்பொழுதும் "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}