- கா.சா.ஷர்மிளா
கஸஸ் அத்தியாயத்தில் மூஸா நபியின் தாயாரை பார்த்து: அச்சம் கொள்ளாதீர்! கவலை கொள்ளாதீர்! என்று அல்லாஹ் சொல்கிறான்.
மர்யம் அத்தியாயத்தில் மர்யம் அவர்களை பார்த்து: கவலைப்படாதீர் என அழைத்து சொன்னான்.
அஹ்ஜாப் அத்தியாயத்தில் நபியின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்

பல வசனங்கள் பெண்கள் கவலைப் பட கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன.
ஏனென்றால், பெண்களின் கவலை மிக ஆழமாக இருக்கும். கவலை பெண்களின் அழகைப் போக்கி விடும். கவலை பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.. கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை. கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது. கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.
கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.
வார்த்தையினால் உங்கள் தாயாரைக் காயப்படுத்தாதீர். உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர். உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர். உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள்.
எப்பொழுதும் "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}