- கா. சா. ஷர்மிளா
கோவிலுக்குள் சிலைகள் அழகம்மா...
வீட்டிற்குள் நீயே அழகம்மா...!
அரியணை இல்லா அரசாங்கம் அம்மா..
அவ்வரசங்கத்தின் அரசியே நீயம்மா...!
சுறுசுறுப்பாக தேனீக்கு இணையாக
உழைப்பவள் நீயம்மா...!
என் இல்லக்கூட்டிக்கு ராணி நீயம்மா...!
எனது இல்ல முதல் மருத்துவரே நீயம்மா..!

எனது இல்ல முதல் சேமிப்பு வங்கி நீயம்மா...!
அன்புக்கும் அக்கறைக்கும் நீயே எடுத்துக்காட்டம்மா..!
தன்னாசை விருப்பங்களை கணவன் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பவள் அம்மா...!
முன்னெழுந்தே பின் தூங்குபவளே நீயம்மா...!
ஒருநாள் கூட விடுப்பு இல்லா உன்வேலையம்மா...!
அத்துணை திறமைகளின் அரசியம்மா...!
உன் திறமைகள் வீட்டில் பூச்சியாய் இருக்குதம்மா....!
வான்வெளியில் வெண்ணிலாவாய் ஒளிருதம்மா...!
தாய் வீட்டில் தாரகையாய்.... புகுந்த வீட்டில் இல்லத்தரசியாய்...!
பவனிவரும் உனக்கு என் மனமார்ந்த தேசிய இல்லத்தரசி தின வாழ்த்துக்கள்
(இன்று தேசிய இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது)
(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}