நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்

Feb 05, 2026,12:16 PM IST
டில்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளிக்க உள்ளார். 

நேற்று மக்களவையில் நிலவிய கடும் அமளி காரணமாகப் பிரதமர் பேச முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்றைய அவரது உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28ம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆவது குறித்தும் அவர் புகழ்ந்து உரையாற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சலிட்டன. இருந்தும் குடியரசு தலைவர் தனது உரையை நிறைவு செய்தார். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் முடிவில், நேற்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி மக்களவையில் பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




இருப்பினும், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்தும் அமளி நீடித்தது. இதனால் நிலவிய கூச்சல் மற்றும் குழப்பத்தால் பிரதமர் நேற்று தனது உரையை நிகழ்த்தவில்லை.

இன்று பிரதமர் தனது பதிலுரையில், கடந்த பத்து கால ஆட்சியில் எட்டப்பட்ட சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக  எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் தனது பாணியில் பதிலடி கொடுப்பார் எனத் தெரிகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் விவாதம் என்பதால், மக்கள் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்த வாய்ப்புள்ளது.

விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை நோக்கிய பயணத்தை அவர் கோடிட்டுக் காட்டுவார். எதிர்க்கட்சிகள் இன்றும் தங்கள் போராட்டத்தைத் தொடர வாய்ப்புள்ளதால், நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமரின் பதிலுரையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்