- வ.சரசுவதி
அம்மாவின் மௌனம்
அம்மாவின் மௌனங்களில்...
அதிகமாய் வலி இருக்கும்
நிறைவேறாமல் போன
ஒரு ஏக்கம் இருக்கும்
தெரிந்தோ தெரியாமலோ
நாம் காட்டிய கோபத்தின்
தாக்கம் இருக்கும்
திரும்ப வந்து பாசமாய்
நாலு வார்த்தை பேசமாட்டார்களா
என்ற ஏக்கம் இருக்கும்

தன் வயதை நினைத்து
பயம் இருக்கும்
அம்மாவை அதிகமாய் மௌனங்களோடு
பேச விடாதீர்கள்
பழகிவிட்டால் புன்னகையை மறக்கக்கூடும்...
அம்மாவின் மௌனம் வீட்டையே ஆட்டி வைக்கும்
அவளின் மௌன அலைகளின் சத்தம் வீடு எங்கும் கேட்கும்
எரிமலையாய் அவளின் மௌனம் கலைய
வேண்டாம் என வீடு எதிர்பார்க்கும்
எதற்காக இந்த மௌனம் என எவருக்குமே புரியாது
புரிந்து கொள்ளவும் முடியாது
காரணத்தையும் அவளே மௌனமாக செரித்துக் கொள்வாள்
மௌனமாய் இருப்பினும் செயல்பாடுகளில் அவள் என்றும் சக்கரம்
அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்
சிறு அழைப்பும் அணைப்பும் போதும்
அந்த மெளனம் கலைய...!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
TVK MLAs.. எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!
அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்
'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!
{{comments.comment}}