அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்!

Nov 03, 2025,10:34 AM IST

- வ.சரசுவதி


அம்மாவின் மௌனம்

அம்மாவின் மௌனங்களில்...

அதிகமாய் வலி இருக்கும்


நிறைவேறாமல் போன

ஒரு ஏக்கம் இருக்கும்


தெரிந்தோ தெரியாமலோ

நாம் காட்டிய கோபத்தின் 

தாக்கம் இருக்கும்


திரும்ப வந்து பாசமாய் 

நாலு வார்த்தை பேசமாட்டார்களா 

என்ற ஏக்கம் இருக்கும்




தன் வயதை நினைத்து 

பயம் இருக்கும்


அம்மாவை அதிகமாய் மௌனங்களோடு 

பேச விடாதீர்கள்

பழகிவிட்டால் புன்னகையை மறக்கக்கூடும்...


அம்மாவின் மௌனம் வீட்டையே ஆட்டி வைக்கும்


அவளின் மௌன அலைகளின் சத்தம் வீடு எங்கும் கேட்கும்


எரிமலையாய் அவளின் மௌனம் கலைய

வேண்டாம் என வீடு எதிர்பார்க்கும்


எதற்காக இந்த மௌனம் என எவருக்குமே புரியாது 

புரிந்து கொள்ளவும் முடியாது 


காரணத்தையும் அவளே மௌனமாக செரித்துக் கொள்வாள்

மௌனமாய் இருப்பினும் செயல்பாடுகளில் அவள் என்றும் சக்கரம்  

அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள் 

சிறு அழைப்பும் அணைப்பும் போதும் 

அந்த மெளனம் கலைய...!


(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்