- வ.சரசுவதி
அம்மாவின் மௌனம்
அம்மாவின் மௌனங்களில்...
அதிகமாய் வலி இருக்கும்
நிறைவேறாமல் போன
ஒரு ஏக்கம் இருக்கும்
தெரிந்தோ தெரியாமலோ
நாம் காட்டிய கோபத்தின்
தாக்கம் இருக்கும்
திரும்ப வந்து பாசமாய்
நாலு வார்த்தை பேசமாட்டார்களா
என்ற ஏக்கம் இருக்கும்

தன் வயதை நினைத்து
பயம் இருக்கும்
அம்மாவை அதிகமாய் மௌனங்களோடு
பேச விடாதீர்கள்
பழகிவிட்டால் புன்னகையை மறக்கக்கூடும்...
அம்மாவின் மௌனம் வீட்டையே ஆட்டி வைக்கும்
அவளின் மௌன அலைகளின் சத்தம் வீடு எங்கும் கேட்கும்
எரிமலையாய் அவளின் மௌனம் கலைய
வேண்டாம் என வீடு எதிர்பார்க்கும்
எதற்காக இந்த மௌனம் என எவருக்குமே புரியாது
புரிந்து கொள்ளவும் முடியாது
காரணத்தையும் அவளே மௌனமாக செரித்துக் கொள்வாள்
மௌனமாய் இருப்பினும் செயல்பாடுகளில் அவள் என்றும் சக்கரம்
அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்
சிறு அழைப்பும் அணைப்பும் போதும்
அந்த மெளனம் கலைய...!
(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}