அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

Oct 24, 2025,05:05 PM IST

- பா.சுமதி சரவணன்


என்னுயிர் தமிழே 

எனக்கு அம்மா முதலில் அறிமுகம் என்றால் 

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே 

என்னை உனக்கு தருவேன் தமிழே

ஏனெனில் நீ என் உயிர் மூச்சு. 

என் உயிர் தமிழே.

நீ நீ நீ என் அறிவு பசிக்கு  விருந்து.

நீ என் உள்ள கிடக்கைக்கு மருந்து.

நீ என் உயிர் தமிழே.

தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொல்வார்கள்.

அமுதம் என்றால் வாழ வைக்கும் தன்மையை கொண்டது என்பது பொருள்

அதே போல் தான் என் தமிழும் 




என் உயிர் தமிழும் என்றும் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

இனி தமிழ் மெல்ல சாகும் என்றார் பாரதி .

உனக்கு தமிழுக்கு அழிவு  கிடையாது என்பதை தான் அப்படி உரைத்தார் அவர்.

இந்த உலகம்  உலகம் இருக்கும் வரை நீ இளமையோடு இருப்பாய் என் உயிர் தமிழே.

ஏனென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. 

என்னுயிர் தமிழே..

கல் வந்துவிட்டது அது நொறுங்கி தான் மண் வர வேண்டும் 

அதற்கு முன்னேயே  தமிழ் வந்துவிட்டது.

அத்தகைய சிறப்பு பெற்ற என் உயிர் தமிழே ...

என்றும் நிலைத்து நின்று வாழ்வாய். வாழ வைப்பாய்...

வளர்க தமிழ்

வாழ்க தமிழ்


கவிதை வடித்த பா.சுமதி சரவணன்.M.sc( yoga )NIIT, சென்னை. திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ்ச் சேவை புரிந்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

அதிகம் பார்க்கும் செய்திகள்