டில்லி : தமிழக திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய பேச்சு, பார்லிமென்ட்டில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் செங்கல்பட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பிரமுகரும், தமிழக வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் டேபிள் துடைப்பதற்கும், கட்டுமான வேலை செய்வதற்கும், பானிபூரி விற்பதற்கும் தான் வடமாநில தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள். காரணம், அவர்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களின் மாநிலங்களில் வேலை இல்லை. அதனால் பிழைப்பிற்காக தமிழகத்தை தேடி வருகிறார்கள் என தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த பேச்சிற்கு தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக பாஜக.,வின் எக்ஸ் தள பக்கத்தில், அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலைக்காக பல மாநிலங்களில் இடம்பெயர்ந்து தான் வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் வேலைக்காக பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து தான் வாழ்கிறார்கள். இதில் வடக்கு, தெற்கு என பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வேலையில் சிறிது, பெரியது என எதுவும் கிடையாது. திமுக.,வினர் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தி பேசும் தொழிலாளர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக அமைச்சரின் பேச்சு லோக்சபாவிலும் எதிரொலித்தது. திமுக அமைச்சரின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் மிக கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பார்லிமென்டில் திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட துவங்கி விட்டது. இந்த நிலையில் திமுக அமைச்சரின் பேச்சு, கூட்டணியையே முறிய செய்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!
முதல் தோட்டா.....!
{{comments.comment}}