டெல்லி: பழைய ராகுல் காந்தி இப்போது இல்லை. அந்த ராகுல் காந்தியை நான் கொன்று விட்டேன். எனக்கு இமேஜ் முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. இனி அந்த ராகுல் காந்தி திரும்ப வர மாட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் ராகுல் காந்தி. தற்போது அவர் ஹரியானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின்போது செய்தியாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது வைரலாகியுள்ளது.
"பழைய ராகுல் காந்தி உங்களது மனதில்தான் உள்ளார். அவரை நான் கொன்று விட்டேன். இப்போது அவர் இல்லை. எனது மனதில் இல்லை. அவர் போய் விட்டார்.. இனி வர மாட்டார்" என்று கூறினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது ராகுல் காந்தி அல்ல.. அவரை நீங்கள் பார்க்கலாம்.. ஆனால் புரிந்து கொள்ள முடியாது. இந்து புராணங்களைப் படியுங்கள். சிவனைப் படியுங்கள்.. உங்களுக்குப் புரியும். அதிர்ச்சி அடையாதீர்கள்.. ராகுல் காந்தி உங்களது தலைக்குள்தான் இருக்கிறார். என்னிடம் இல்லை. அவர் பாஜகவின் தலைக்குள் இருக்கிறார்.. என்னிடம் இல்லை" என்று கூறினார் ராகுல் காந்தி.
அத்தோடு விடவில்லை ராகுல்காந்தி.. " என் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு இமேஜ் பற்றிக் கவலை இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. நல்லவனாகவும் பார்க்கலாம், கெட்டவனாகவும் பார்க்கலாம்" என்றார் ராகுல் காந்தி.
மிகவும் தத்துவார்த்தமாக ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது இமேஜை வலிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}