டெல்லி: பழைய ராகுல் காந்தி இப்போது இல்லை. அந்த ராகுல் காந்தியை நான் கொன்று விட்டேன். எனக்கு இமேஜ் முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. இனி அந்த ராகுல் காந்தி திரும்ப வர மாட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் ராகுல் காந்தி. தற்போது அவர் ஹரியானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின்போது செய்தியாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது வைரலாகியுள்ளது.
"பழைய ராகுல் காந்தி உங்களது மனதில்தான் உள்ளார். அவரை நான் கொன்று விட்டேன். இப்போது அவர் இல்லை. எனது மனதில் இல்லை. அவர் போய் விட்டார்.. இனி வர மாட்டார்" என்று கூறினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது ராகுல் காந்தி அல்ல.. அவரை நீங்கள் பார்க்கலாம்.. ஆனால் புரிந்து கொள்ள முடியாது. இந்து புராணங்களைப் படியுங்கள். சிவனைப் படியுங்கள்.. உங்களுக்குப் புரியும். அதிர்ச்சி அடையாதீர்கள்.. ராகுல் காந்தி உங்களது தலைக்குள்தான் இருக்கிறார். என்னிடம் இல்லை. அவர் பாஜகவின் தலைக்குள் இருக்கிறார்.. என்னிடம் இல்லை" என்று கூறினார் ராகுல் காந்தி.
அத்தோடு விடவில்லை ராகுல்காந்தி.. " என் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு இமேஜ் பற்றிக் கவலை இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. நல்லவனாகவும் பார்க்கலாம், கெட்டவனாகவும் பார்க்கலாம்" என்றார் ராகுல் காந்தி.
மிகவும் தத்துவார்த்தமாக ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது இமேஜை வலிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
{{comments.comment}}