டெல்லி: பழைய ராகுல் காந்தி இப்போது இல்லை. அந்த ராகுல் காந்தியை நான் கொன்று விட்டேன். எனக்கு இமேஜ் முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. இனி அந்த ராகுல் காந்தி திரும்ப வர மாட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் ராகுல் காந்தி. தற்போது அவர் ஹரியானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின்போது செய்தியாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது வைரலாகியுள்ளது.

"பழைய ராகுல் காந்தி உங்களது மனதில்தான் உள்ளார். அவரை நான் கொன்று விட்டேன். இப்போது அவர் இல்லை. எனது மனதில் இல்லை. அவர் போய் விட்டார்.. இனி வர மாட்டார்" என்று கூறினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது ராகுல் காந்தி அல்ல.. அவரை நீங்கள் பார்க்கலாம்.. ஆனால் புரிந்து கொள்ள முடியாது. இந்து புராணங்களைப் படியுங்கள். சிவனைப் படியுங்கள்.. உங்களுக்குப் புரியும். அதிர்ச்சி அடையாதீர்கள்.. ராகுல் காந்தி உங்களது தலைக்குள்தான் இருக்கிறார். என்னிடம் இல்லை. அவர் பாஜகவின் தலைக்குள் இருக்கிறார்.. என்னிடம் இல்லை" என்று கூறினார் ராகுல் காந்தி.
அத்தோடு விடவில்லை ராகுல்காந்தி.. " என் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு இமேஜ் பற்றிக் கவலை இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. நல்லவனாகவும் பார்க்கலாம், கெட்டவனாகவும் பார்க்கலாம்" என்றார் ராகுல் காந்தி.
மிகவும் தத்துவார்த்தமாக ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது இமேஜை வலிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}