என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!

Mar 12, 2025,06:44 PM IST

சென்னை: என் கணவரின் கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் என நடிகை ஜோதிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன்  ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.


சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக,  உருவாகியுள்ள இப்படம் வெளியாகும் முன்னரே படத்தின் காட்சிகள் குறித்து அவ்வப்போது படக் குழுவினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தனர். இதனால் இப்படம்  குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.




இந்த நிலையில், கங்குவா படம் பெரும்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இப்படம் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக சவுண்ட் எபெக்ட் அதிகமாக இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதேபோல் இப்படத்தின் காட்சிகளை வைத்து ட்ரோல்களாக சோசியல் மீடியாவில் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டது.


இதற்கிடையே நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்.  படத்திற்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்புகின்றனர் என பதிவிட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது  நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கங்குவா படத்தின் விமர்சனம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 


வெற்றி பெற்ற சில மோசமான கமர்சியல் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் என் கணவரின் கங்குவா படத்திற்கு கடுமையான விமர்சனங்களே வந்தன. படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் தென்னிந்தியாவில் வந்த எத்தனையோ மோசமான படங்களுக்கு கொடுத்ததை விட கடுமையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.


மற்ற படங்களைவிட கங்குவா பெற்ற விமர்சனங்கள் என்னை பாதித்தது. மேலும், இந்த விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது நியாயம் இல்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

news

நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை

news

டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!

news

120 கிலோ எடையிலிருந்து ஸ்லிம் பாடிக்கு மாறிய விஜய் சேதுபதி மகன்.. காரணம் இதுதானாம்!

news

அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்