என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!

Mar 12, 2025,06:44 PM IST

சென்னை: என் கணவரின் கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் என நடிகை ஜோதிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன்  ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.


சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக,  உருவாகியுள்ள இப்படம் வெளியாகும் முன்னரே படத்தின் காட்சிகள் குறித்து அவ்வப்போது படக் குழுவினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தனர். இதனால் இப்படம்  குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.




இந்த நிலையில், கங்குவா படம் பெரும்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இப்படம் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக சவுண்ட் எபெக்ட் அதிகமாக இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதேபோல் இப்படத்தின் காட்சிகளை வைத்து ட்ரோல்களாக சோசியல் மீடியாவில் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டது.


இதற்கிடையே நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்.  படத்திற்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்புகின்றனர் என பதிவிட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது  நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கங்குவா படத்தின் விமர்சனம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 


வெற்றி பெற்ற சில மோசமான கமர்சியல் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் என் கணவரின் கங்குவா படத்திற்கு கடுமையான விமர்சனங்களே வந்தன. படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் தென்னிந்தியாவில் வந்த எத்தனையோ மோசமான படங்களுக்கு கொடுத்ததை விட கடுமையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.


மற்ற படங்களைவிட கங்குவா பெற்ற விமர்சனங்கள் என்னை பாதித்தது. மேலும், இந்த விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது நியாயம் இல்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

news

Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!

news

தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்