- இரா.மும்தாஜ் பேகம்
வெண்ணிலவை வரவேற்க
விழி மூடும் வெண் கதிர்கள்
விடியலை வரவேற்க
விழித்திருக்கும் விண்மீன்கள்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் பனித்துளிகள்
கார்முகிலை வரவேற்க
காத்திருக்கும் கழனியெல்லாம்.

வசந்தத்தை வரவேற்க
வனமரங்கள் இலையுதிர்க்கும்
வண்டுகளை வரவேற்க
வண்ணமலர்கள் தேன் சொறியும்
புத்தாண்டை வரவேற்க
புதைந்து விடும் நாட்களெல்லாம்
புதுமையை வரவேற்க
புதைந்து விடும் பழமையெல்லாம்
தன் மகவை
தான் உண்ணும் முதலை
தன் மகவால்
இந்த முரண்பாடு
எல்லாம்
இறைவனின் ஏற்பாடு
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)
விடுவிக்கப்படாத புதிர்கள்... Unanswered Riddles!
யார் உண்மையான கடவுள் தெரியுமா?
மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா.. இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
வில்லங்கமாக பேசிய விஸ்வநாதன்.. அமைதியாக பதிலடி கொடுத்த நடிகர் சூரி!
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்
இயற்கையில் ஏன் .. இந்த முரண்பாடு?
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
{{comments.comment}}