- இரா.மும்தாஜ் பேகம்
வெண்ணிலவை வரவேற்க
விழி மூடும் வெண் கதிர்கள்
விடியலை வரவேற்க
விழித்திருக்கும் விண்மீன்கள்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் பனித்துளிகள்
கார்முகிலை வரவேற்க
காத்திருக்கும் கழனியெல்லாம்.

வசந்தத்தை வரவேற்க
வனமரங்கள் இலையுதிர்க்கும்
வண்டுகளை வரவேற்க
வண்ணமலர்கள் தேன் சொறியும்
புத்தாண்டை வரவேற்க
புதைந்து விடும் நாட்களெல்லாம்
புதுமையை வரவேற்க
புதைந்து விடும் பழமையெல்லாம்
தன் மகவை
தான் உண்ணும் முதலை
தன் மகவால்
இந்த முரண்பாடு
எல்லாம்
இறைவனின் ஏற்பாடு
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}