- இரா.மும்தாஜ் பேகம்
வெண்ணிலவை வரவேற்க
விழி மூடும் வெண் கதிர்கள்
விடியலை வரவேற்க
விழித்திருக்கும் விண்மீன்கள்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் பனித்துளிகள்
கார்முகிலை வரவேற்க
காத்திருக்கும் கழனியெல்லாம்.

வசந்தத்தை வரவேற்க
வனமரங்கள் இலையுதிர்க்கும்
வண்டுகளை வரவேற்க
வண்ணமலர்கள் தேன் சொறியும்
புத்தாண்டை வரவேற்க
புதைந்து விடும் நாட்களெல்லாம்
புதுமையை வரவேற்க
புதைந்து விடும் பழமையெல்லாம்
தன் மகவை
தான் உண்ணும் முதலை
தன் மகவால்
இந்த முரண்பாடு
எல்லாம்
இறைவனின் ஏற்பாடு
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}