- இரா.மும்தாஜ் பேகம்
வெண்ணிலவை வரவேற்க
விழி மூடும் வெண் கதிர்கள்
விடியலை வரவேற்க
விழித்திருக்கும் விண்மீன்கள்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் பனித்துளிகள்
கார்முகிலை வரவேற்க
காத்திருக்கும் கழனியெல்லாம்.

வசந்தத்தை வரவேற்க
வனமரங்கள் இலையுதிர்க்கும்
வண்டுகளை வரவேற்க
வண்ணமலர்கள் தேன் சொறியும்
புத்தாண்டை வரவேற்க
புதைந்து விடும் நாட்களெல்லாம்
புதுமையை வரவேற்க
புதைந்து விடும் பழமையெல்லாம்
தன் மகவை
தான் உண்ணும் முதலை
தன் மகவால்
இந்த முரண்பாடு
எல்லாம்
இறைவனின் ஏற்பாடு
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}