புனே: தனது பிறந்த நாளுக்கு காஸ்ட்லி கிப்ட்டும் தரலை, டெல்லிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா அதுக்கும் பெர்மிஷன் தரலை.. துபாய்க்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லியும் கூட்டிட்டுப் போகலை என்பதால் கோபமடைந்த மனைவி, தனது கணவர் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் பரிதாபமாக இறந்து போனார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனாவ்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ரேணுகா. 38 வயதாகும் ரேணுகாவும் நிகில் கண்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் ரேணுகாவுக்கு பிறந்தநாள் வந்தது. இதை துபாயில் கொண்டாட அவர் விரும்பினார். ஆனால் அங்கு சென்று கொண்டாட விரும்பவில்லை நிகில் கண்ணா. இதனால் துபாய்க்கு கூட்டிச்செல்ல மறுத்தார். சரி பரவாயில்லை, டெல்லியில் போய் உறவினர்களுடன் கொண்டாடிக் கொள்கிறேன். அதற்காவது அனுமதியுங்கள் என்று கேட்டுள்ளார் ரேணுகா. அதற்கும் நிகில் கண்ணா அனுமதி தரலையாம். இதனால் கடு் ஏமாற்றமடைந்தார் ரேணுகா. தான் கேட்ட காஸ்ட்லியான கிப்ட்டுகளையும் கூட நிகில் கண்ணா தரவில்லையாம்.

இதனால் கோபமடைந்தார் ரேணுகா. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது தன்னுடைய பேச்சைக் கேட்க மறுத்த கணவர் மீது கோபம் அடைந்த ரேணுகா, நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு பற்களும் உடைந்து முகமெல்லாம் ரத்தக் களறியாகி விட்டது. சில நொடிகளில் சுய நினைவிழந்து மயங்கி விழுந்தார் நிகில் கண்ணா. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரேணுகா.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகில் கண்ணா, அங்கு மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரேணுகா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புருஷனை மூஞ்சியில் குத்தலாம்.. மூக்கை உடைக்கலாம்.. ஏன் அடிக்கலாம், மிதிக்கலாம்.. மனைவிகளுக்கு முழு உரிமை இருக்கு.. அதுக்காக இப்படியா உயிர் போற அளவுக்கு அடிப்பாங்க..!
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}