"ஏன் துபாய்க்கு கூட்டிட்டுப் போகலை".. கணவர் முகத்தில் ஓங்கி குத்திய மனைவி.. கடைசியில்..!

Nov 25, 2023,05:28 PM IST

புனே: தனது பிறந்த நாளுக்கு காஸ்ட்லி கிப்ட்டும் தரலை, டெல்லிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா அதுக்கும் பெர்மிஷன் தரலை.. துபாய்க்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லியும் கூட்டிட்டுப் போகலை என்பதால் கோபமடைந்த மனைவி, தனது கணவர் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் பரிதாபமாக இறந்து போனார்.


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனாவ்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ரேணுகா. 38 வயதாகும் ரேணுகாவும் நிகில் கண்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.


இந்த நிலையில் ரேணுகாவுக்கு பிறந்தநாள் வந்தது. இதை துபாயில் கொண்டாட அவர் விரும்பினார். ஆனால் அங்கு சென்று கொண்டாட விரும்பவில்லை நிகில் கண்ணா. இதனால் துபாய்க்கு கூட்டிச்செல்ல மறுத்தார்.  சரி பரவாயில்லை, டெல்லியில் போய் உறவினர்களுடன் கொண்டாடிக் கொள்கிறேன். அதற்காவது அனுமதியுங்கள் என்று கேட்டுள்ளார் ரேணுகா. அதற்கும் நிகில் கண்ணா அனுமதி தரலையாம். இதனால் கடு் ஏமாற்றமடைந்தார் ரேணுகா. தான் கேட்ட காஸ்ட்லியான கிப்ட்டுகளையும் கூட நிகில் கண்ணா தரவில்லையாம். 




இதனால் கோபமடைந்தார் ரேணுகா. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது தன்னுடைய பேச்சைக் கேட்க மறுத்த கணவர் மீது கோபம் அடைந்த ரேணுகா, நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு பற்களும் உடைந்து முகமெல்லாம் ரத்தக் களறியாகி விட்டது. சில நொடிகளில் சுய நினைவிழந்து மயங்கி விழுந்தார் நிகில் கண்ணா.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரேணுகா.


உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகில் கண்ணா, அங்கு மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரேணுகா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


புருஷனை மூஞ்சியில் குத்தலாம்.. மூக்கை உடைக்கலாம்.. ஏன் அடிக்கலாம், மிதிக்கலாம்.. மனைவிகளுக்கு முழு உரிமை இருக்கு..  அதுக்காக இப்படியா உயிர் போற அளவுக்கு அடிப்பாங்க..!

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்