சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அணிக்குள்ளேயே கூட ரோஹித்துக்கு ஆதரவான குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் டிவீட் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதை விட முக்கியமாக சிஎஸ்கே அணி ரோஹித்தை பாராட்டி போட்ட டிவீட்டுக்கு, ரோஹித்தின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டின் போட்டு பரபரப்பை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளார்.
ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பிரபல ஸ்ரீனி மாமாவும் டிவீட் போட்டு ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 வருடம் அசத்தலான பயணத்தை மேற்கொண்டவர் ரோஹித் சர்மா. இதில் 5 முறை கப் அடித்து சாதனை படைத்துள்ளார். தோனியை விட அதிக கப் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது. மும்பை மண்ணின் மைந்தரான சச்சின் டெண்டுல்கரால் கூட ஐபிஎல்லி ஜொலிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மா தனது அருமையான கேப்டன்சியால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் வகையில் மும்பையை மாற்றி வைத்துள்ளார்.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}