என்னாது.. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வரப் போறாரா ரோஹித் சர்மா.. பத்ரி டிவீட்.. ஸ்ரீனி மாமா ஆச்சரியம்!

Dec 17, 2023,10:36 AM IST

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அணிக்குள்ளேயே கூட ரோஹித்துக்கு ஆதரவான குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.


இந்த நிலையில் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் டிவீட் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதை விட முக்கியமாக சிஎஸ்கே அணி ரோஹித்தை பாராட்டி போட்ட டிவீட்டுக்கு, ரோஹித்தின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டின் போட்டு பரபரப்பை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளார்.


ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பிரபல ஸ்ரீனி மாமாவும் டிவீட் போட்டு ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளார்.




மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 வருடம் அசத்தலான பயணத்தை மேற்கொண்டவர் ரோஹித் சர்மா. இதில் 5 முறை கப் அடித்து  சாதனை படைத்துள்ளார். தோனியை விட அதிக கப் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.  மும்பை மண்ணின் மைந்தரான சச்சின் டெண்டுல்கரால் கூட ஐபிஎல்லி ஜொலிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மா தனது அருமையான கேப்டன்சியால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் வகையில் மும்பையை மாற்றி வைத்துள்ளார்.

ரோஹித் சர்மா இல்லாத மும்பையா கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரது பங்கு மிகப் பெரியது. இந்த நிலையில்தான் அவரை மாற்றி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். இதனால் ரோஹித் சர்மா வேறு அணிக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தஉள்ளது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  வரக் கூடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் பத்ரிநாத் டிவீட் போட்டுள்ளார். மஞ்சள் ஜெர்சியில் ரோஹித் படத்தைப் போட்டு ரோஹித் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். பிரபல ஸ்ரீனி மாமாவும் இதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அனேகமாக தோனி அடுத்த ஆண்டு கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. இந்த வருடத்தோடு அவர் கேப்டன் பதவிக்கு விடை கொடுக்கக் கூடும். அடுத்த ஆண்டு முதல் அணி நிர்வாகத்தில் அவர் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் சென்னை அணிக்கு ஒரு நல்ல கேப்டன் தேவை இருக்கவே இருக்கிறது.. அந்த வகையில் பார்த்தால் ரோஹித்தை பிடித்து உள்ளே போடவும் வாய்ப்பிருக்கிறது.

லாஜிக் எல்லாம் கரெக்டாதான் இருக்கு.. பார்க்கலாம்.. என்ன நடக்கப் போகிறது என்பதை.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்