சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அணிக்குள்ளேயே கூட ரோஹித்துக்கு ஆதரவான குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் டிவீட் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதை விட முக்கியமாக சிஎஸ்கே அணி ரோஹித்தை பாராட்டி போட்ட டிவீட்டுக்கு, ரோஹித்தின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டின் போட்டு பரபரப்பை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளார்.
ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பிரபல ஸ்ரீனி மாமாவும் டிவீட் போட்டு ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 வருடம் அசத்தலான பயணத்தை மேற்கொண்டவர் ரோஹித் சர்மா. இதில் 5 முறை கப் அடித்து சாதனை படைத்துள்ளார். தோனியை விட அதிக கப் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது. மும்பை மண்ணின் மைந்தரான சச்சின் டெண்டுல்கரால் கூட ஐபிஎல்லி ஜொலிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மா தனது அருமையான கேப்டன்சியால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் வகையில் மும்பையை மாற்றி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}