"நம்மை நோக்கித்தான் வருது".. டிச 3 ஆம் தேதி உருவாகும் புயல்.. சென்னை அருகே கரையை கடக்குமா?

Nov 30, 2023,03:01 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: டிசம்பர் 3ஆம் தேதி  உருவாகும் புயல்  வட தமிழகம் நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனேகமாக அது சென்னை அருகே  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று  சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது வானிலை மையம். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்நிலையில் வங்க கடலில் புயல் 2ஆம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக கூடும். மேலும் வங்கக்கடலில் உருவான இந்த புயல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். பின்னர்  டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும்.




வங்கக்கடலில் உருவாகும் மிச்சாங் புயல் சென்னை அருகே  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நகரும் வரைபடத்தை பார்க்கும் போது சென்னை அருகே கரையை கடப்பது போல காட்டுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் ,சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம் . தென் கிழக்கு வங்கு கடலில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். இதனால் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மீனவர்கள் யாருக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.


சரி புயல் வர்றது வரட்டும்.. நம்மை நோக்கி வரப் போகும் புயலுக்கு டெடிகேட் பண்ண ஒரு பாட்டு சொல்லுங்களேன்!

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்