தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

Aug 06, 2025,06:05 PM IST

மதுரை: தவெக 2வது மாநில மாநாட்டை முன்கூட்டியே நடத்தப் போவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து, அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு ஜூலை 15ம் தேதியே போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டும், அனுமதி வழங்கப்படவில்லை.  இதற்கு போலீசார் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால் அதற்கு தமிழ்நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும். ஆகஸ்ட் 25ம் தேதி மாநாடு நடத்தினால் தொடர்ச்சியாக போலீசாருக்கு ஓய்வு இல்லாமல் பணி வழங்குவது சிரமமாக இருக்கும். அதோடு மாநாட்டிற்கும் போதுமான பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பது தான். இதனால் மாநாட்டை ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலான ஏதாவது ஒரு தேதிக்கு மாற்றி வைத்துக் கொள்ளும் படி போலீசார் தரப்பில் வாய்மொழியாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


போலீசாரின் கோரிக்கையை ஏற்று, தற்போது ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய், நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது புதிய மாநாட்டு தேதியை குறிப்பிட்டு, போலீசாரிடம் பாதுகாப்பும் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதியில் போலீசார் அனுமதி அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், மாநாட்டிற்கு இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளது. மாநாட்டிற்கான வேலைகள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனிக்கப்பட்டு வந்தாலும் போலீசார் புதிதாக ஏதாவது கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. போலீசார் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாநாட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். 




போலீசாரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு மீண்டும் போலீசாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதனை சரி பார்த்த பிறகு தான் போலீசார் மாநாட்டிற்கு அனுமதி அளிப்பார்கள். இது தான் வழக்கமான நடைமுறை. ஆனால் இவை அனைத்தும் இந்த 2 வார காலத்திற்குள் நடத்தி முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.


அதோடு அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டால் புதிய தேதியும் தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது சூழல் ஏற்பட்டாலோ அல்லது போலீசார் இந்த முறையும் அனுமதி அளிக்க தாமதித்தாலோ தவெக நிச்சயம் கோர்ட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு முன் மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷித் நடத்திய முருகன் மாநாட்டிற்கும் இதே போல் போலீசார் தரப்பில் அனுமதி வழங்க தாமதித்ததால், அவர்கள் கோர்டிற்கு சென்று மாநாட்டிற்கு அனுமதி பெற்றார்கள். அதே போல் தவெக.,வும் கோர்ட்டின் துணை மற்றும் வழிகாட்டுதலுடன் மாநாட்டை நடத்தவும் வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்